மகளிர்தினக் கவிதை: உறக்கம்
|
![](images/pg-tit-curve.jpg) |
மகளிர்தினக் கவிதை: பெண் எனும் நான் |
![](images/add.jpg) ![](images/view.jpg) ![](images/refer.jpg) |
- நளினி | மார்ச் 2016 |![]() |
|
|
|
![](http://www.tamilonline.com/media/Mar2016/34/ceb332e0-6257-4c1c-b099-83c045b5ba78.jpg) |
மெல்லிய மலரல்ல புயல் கொண்டுபோக; ஆழமாய்ப் பதிந்திட்ட ஆணிவேர் நான்!
குளிர்தவழும் மதியல்ல கருமேகம் சூழ; நெருப்பினை இறகாக்கும் ஆதவன் ஆர்கதிர் நான்!
கூட்டுக்குள் குயிலல்ல இசைபாடி அடங்க; தீதினைக் கிழிக்கும் வெறிகொண்ட பறவை நான்!
வண்ணச் சிதறலாய் கலையும் வானவில்லல்ல, தடைபல தகர்க்கும் கூரிய மின்னல் நான்! |
|
புவியியக்கும் விசை அறியும் ஈடில்லாத் திறன் எனக்கு, பல்கலை அனைத்தும் களம்கண்ட வெற்றிச்செருக்கு!
எதனிலும் சரிபாதி நான், பல்லுயிர்ப் பாலமும் நான், ஊனொடு மெய்ப்பொருள் நான், சர்வமும் பெண் எனும் நான்!
நளினி, மில்வாக்கி, விஸ்கான்சின் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
மகளிர்தினக் கவிதை: உறக்கம்
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|