Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
Chinnaswamy (India)

Comments Home
Comments by Chinnaswamy (35)
Article: மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்த்தசாரதி சபதம்
Category: ஹரிமொழி (Jan 2019) Posted On: Jan 09, 2019
பெரிய முடிச்சுடன் நிறுத்தியிருக்கிறீர்கள்!! பாஞ்சாலி "கண் தெரியாதவனுக்கு பிறந்தவனுக்கும் கண் தெரியவில்லை போலும்" என்று சிரித்ததால் தான் துரியோதனன் இதை பழிவாங்க துடித்துக்கொண்டிருந்தான் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம் /படித்திருக்கிறோம். இனிமேல் சிரிப்பதில்லை என்று ஒருவேளை முடிவெடுத்தாளோ? VCS (V.Chinnaswamy)

Article: மார்ச் 2017: வாசகர் கடிதம்
Category: வாசகர் கடிதம் (Mar 2018) Posted On: Mar 21, 2018
I do not find any condolence news about late Parur. M.S.Anantharaman, elder brother of famous Violinist MSG. VCS

Article: மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நாடாமல் வந்தடைந்த நாடு
Category: ஹரிமொழி (Mar 2018) Posted On: Mar 08, 2018
திரு ஹரிமொழி எழுதிவரும் தொடர் மிகவும் ஆர்வத்தைத் தூண்டும்வகையில் உள்ளது. அனுத்யூதம் எப்படி உருவாக்கினார்கள் என்று அடுத்த மாதம் வரை காத்திருக்க வைத்துவிட்டார். VCS

Article: மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அன்பினாலன்று, அச்சத்தால்!
Category: ஹரிமொழி (Feb 2018) Posted On: Feb 20, 2018
திருதிராஷ்டிரனின் மன நிலையை ECG எடுத்து பார்த்தால் எப்படியிருக்கும் என்கிற ஆசிரியரின் கற்பனை மிக நல்ல உதாரணம் VCS

Article: மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சபதங்களின் வரிசை
Category: ஹரிமொழி (Jan 2018) Posted On: Jan 18, 2018
திரு ஹரிகிருஷ்னன் அவர்களின் "ஹரிமொழி" தான் நான் முதலில் படிப்பது அவர் மேற்கோள் காட்ட எடுத்துக்கொள்ளும் ஸ்ரத்தை வியக்க வைக்கிறது. VCS

Article: சுப்புடு
Category: முன்னோடி (Jan 2018) Posted On: Jan 18, 2018
இந்த சுப்புடுவின் துணிச்சல் அசாத்தியம். செம்மங்குடி யையே கலக்கியவர். ஒருமுறை மியூசிக் அகாடெமியில் "யார் இவனை உள்ளே விட்டது? அவனை வெளியே அனுப்பினால் தான் நான் மேற்கொண்டு பாடப்போறேன்" என்று சொல்லும் அளவிற்கு போயிற்று. காரணம்: ஒருமுறை அவர் எழுதியது "மருந்து பாட்டிலை குலுக்குவது போல் உடமபை இப்படியும் அப்படியும் குலுக்கி ஒரு சங்கதியை துப்பினார். இதன் இடையில் மியூசிக் அகாடெமிக்கு 'அந்த AC யை off பண்ணித் தொலையுங்கள்' என்று ஆஞ்ஞாபனை. இவ்வளவிற்கு பிறகும் அந்த சங்கதி ஒன்றும் அவ்வளவு சுகமில்லை" Flute மாலி யை பற்றி ஒரு தரம்: "சவுக்கால் பலஅடி அடித்த பிறகு ஒரு ஸ்பூன் ஜலம் கொடுத்தாலும் அது எவ்வளவு அமிர்தமாக இருக்குமோ அதைப்போல அவர் போடும் சங்கதிகள்"

Article: தம் மக்கள்
Category: ஹரிமொழி (Oct 2016) Posted On: Oct 05, 2016
திரு ஹரிகிருஷ்ணன் அவர்கள் தன மகனை இழந்த செய்தி அறிந்து மிக மிக வருத்தம் அடைந்தேன். அந்த துக்கம் குறைந்த பிறகு எழுதட்டும் அவசரம் ஒன்றும் இல்லை. இப்படிக்கு VCS 21:01 05/10/2016

Article: மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சாரதியின் கடமைபற்றி ராவண சாரதி
Category: ஹரிமொழி (Jun 2016) Posted On: Jun 23, 2016
கர்ணனுக்கு துரோணர் ஆயுதப்பயிற்சி தர மறுத்ததற்கு இதுவரை கேள்விப்பட்ட அல்லது படித்துள்ளவைகளில் சொல்லப்பட்ட காரணம் அவர் பீஷ்மரிடம் இந்த ராஜகுமாரர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கும் காலத்தில் வேறு யாருக்கும் பயிற்சி அளிக்கமாட்டேன் என்று வாக்கு கொடுத்ததாகவும் மேலும் பயிற்சி எடுக்கும் மற்றவன் இந்த ராஜகுமாரர்களுக்கு எதிராக போய்விடக்கூடாது என்பதாலும் Govt servants are not allowed to practice outside என்கிற விதியை ஒட்டி அவர் தர மறுத்தார் என்பது தானே. இதே காரணம் வேடனான ஏகலவ்யனுக்கு மறுத்ததற்கும் ஒத்துப்போகின்றதே! இப்படிக்கு உங்கள் ஆராய்ச்சி கட்டுரையை மிகவும் விரும்பி படிக்கும் ரசிகன் VCS

Article: தங்கச்சிறை?
Category: சிறுகதை (Jun 2016) Posted On: Jun 23, 2016
நல்லவிதமாக சொல்லப்பட்டுள்ளது எனினும் இது சிறுகதை போல் தோன்றவில்லையே! அன்புள்ள ஸ்நேகிதியே விற்கு எழுதப்பட்டது போல் அல்லவா தோன்றுகிறது. உங்கள் வாசகன் V. சின்னஸ்வாமி

Article: பொறையார் கஃபே
Category: சிறுகதை (Apr 2016) Posted On: Apr 13, 2016
நம் தமிழ்நாட்டு அதிகாரிகளின் லக்ஷணத்தை மிகவும் சரியாக சொன்னார் அவன் வாயில் நாலு பஜ்ஜி திணிச்சால், பஜ்ஜி திறந்து வச்சுருக்கோமா தரையில் வச்சிருக்கோமா என்று கண்டு கொள்ளமாட்டார்கள் என்று. மொத்தத்தில் கதை நன்றாக இருந்தது. VCS

Article: ஆனந்தாசனம்
Category: சிறுகதை (Apr 2016) Posted On: Apr 08, 2016
சரி. ஆரம்பத்தில் கணவனை ஒருமையில் அழைத்த பெண் பாதிக் கதையில் மரியாதையுடன் வாங்க போங்க என்று சொல்வதாக உள்ளது விசித்திரமாக உள்ளது இப்படிக்கு VCS

Article: நட்பென்னும் பொறுப்பு...
Category: அன்புள்ள சிநேகிதியே (Apr 2016) Posted On: Apr 08, 2016
நல்லது செய்துள்ள அந்த தம்பதிகளின் பெயர் போட்டிருக்கலாமே; ஒருவேளை அவர்கள் தவிர்க்கச் சொன்னார்களோ? இப்படிக்கு VCS

1 2 3




© Copyright 2020 Tamilonline