Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது | சிரிக்க, சிந்திக்க
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
BATM வழங்கிய 'பாரதிக்கு பரதாஞ்சலி'
மதுமிதா கோவிந்தராஜன் நாட்டிய அரங்கேற்றம்
ராதிகா சங்கர் குழுவினரின் 'பரத நிருத்ய வைபவம்'
அஸ்வினி நாகப்பன் நடன அரங்கேற்றம்
நிவேதிதா ராவ் அரங்கேற்றக் கச்சேரி
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்
அயோவாவில் ஸ்ரீருத்ரம்
ராகவாணியின் 'நவக்ரஹ கிருதி'
- வித்யா நாராயணன்|ஜூலை 2011|
Share:
ஜூன் 18, 2011 அன்று சன்னிவேல் சனாதன தர்ம கேந்திரக் கோவிலில் ஸான் ஹோசே ராகவாணி இசைப்பள்ளியின் மாணவியர் வீணை மற்றும் தீக்ஷிதரின் 'நவக்ரஹ கிருதி' பாடல் நிகழ்ச்சியொன்றை வழங்கினர். இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் பக்கவாத்தியமாக 'நாதோபாஸனா' மிருதங்கப் பள்ளி மாணவர் அமீத் ரங்கநாதன் மிருதங்கம் வாசித்தார்.

நிகழ்ச்சி தீபா சுப்ரமணியனின் வீணைக் கச்சேரியுடன் தொடங்கியது. வீணை குப்பையரின் 'இந்த்த சலமு' என்ற பேகடா வர்ணத்தில் தொடங்கி, கச்சிதமாக 'ப்ரணமாம்யஹம்' என்று பிள்ளையாரை கௌளை ராகத்தில் வணங்கிவிட்டு, காம்போதியில் 'கைலாச நாதேன', குமுதக்ரியாவில் 'அர்த நாரீஸ்வரம்', ஆனந்தபைரவியில் 'மறிவேறே கதி' முதலிய பாடல்களை இனிதே வாசித்தார். அதையடுத்து ராகம்-தானத்துடன் 'பாஹி ஜகஜ்ஜனனி' ஹம்ஸானந்தியில் அம்சமாக அமைந்தது. அமீத் ரங்கநாதன் தனியாவர்தனத்தில் ஆதிதாளத்தில் 'கண்ட' நடையும் திரிகால கோர்வையும் வாசித்து அசத்தினார்.

அடுத்து, குரு லலிதா வெங்கட்ராமனின் மாணவியர் சந்திரகுமாரி சுவர்ணா மற்றும் தாரா பிச்சுமணி, தீக்ஷிதரின் 'நவக்ரஹ கிருதிகளைச் சிறப்பாகப் பாடினர். ஒன்பது கிரஹ தேவர்களையும் பக்தியுடன் தியானிக்கும் வகையில் அமைந்த பாடல்களை இச்சிறுமியர் பக்தியின் ஆழத்தோடு பாடியது நெகிழ்ச்சியளித்தது. “இவற்றைப் பாடினால் நவக்ரஹ பூஜை செய்த பலன் கிடைக்கும்” என்று அறிமுகப்படுத்தினார் குரு லலிதா. இந்தப் பாடல்களை விளக்கிக் கூறினார் வித்யா நாராயணன்.
வித்யா நாராயணன்
More

BATM வழங்கிய 'பாரதிக்கு பரதாஞ்சலி'
மதுமிதா கோவிந்தராஜன் நாட்டிய அரங்கேற்றம்
ராதிகா சங்கர் குழுவினரின் 'பரத நிருத்ய வைபவம்'
அஸ்வினி நாகப்பன் நடன அரங்கேற்றம்
நிவேதிதா ராவ் அரங்கேற்றக் கச்சேரி
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்
அயோவாவில் ஸ்ரீருத்ரம்
Share: 




© Copyright 2020 Tamilonline