Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஹரிமொழி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
நிஹாரிகா, அல்பா ஸாங்கவி பரதநாட்டிய அரங்கேற்றம்
சுதீக்ஷணா வீரவல்லி பரதநாட்டிய அரங்கேற்றம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: பெருஞ்சாலைப் பராமரிப்பு
அட்லாண்டாவில் FeTNA தமிழ் விழா
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி வட அமெரிக்க விஜயம்
கலைமாமணி ரங்கநாயகி ஜெயராமன் வழங்கும் நாட்டிய நாடகம்
மானஸா ரவி பரதநாட்டிய அரங்கேற்றம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: வாகனப் பராமரிப்பு செயற்பட்டறை
கலிபோர்னியாத் தமிழர் மன்றம்: இலங்கைத் தமிழர் நினைவு நாள்
- கனகசபை சிவராமன்|ஆகஸ்டு 2009|
Share:
Click Here Enlargeஜூன் 20, 2009 அன்று கலிஃபோர்னியாத் தமிழர் மன்றம் (Tamils of Northern California) இலங்கை இனப்படுகொலையில் உயிரிழந்த முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நினைவு நாள் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது. லிவர்மோரில் நடந்த இந்த நினைவு நாள் அகவணக்கத்துடன் தொடங்கியது. மன்றத் தலைவர் உரையைத் தொடர்ந்து இலங்கை இனப்பிரச்சனை பற்றிய வரலாறு, இடம்பெயர்ந்த மக்களின் அவலநிலை, இதற்கான அரசியல் தீர்வு ஆகிய குறித்த காணொலிகள் இடம்பெற்றன.

நிகழ்ச்சியின் சிறப்புப் பேச்சாளராக முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளரும் தமிழ் ஆர்வலருமாகிய தமிழருவி மணியன் தமது பாரியாரோடு கலந்துகொண்டார். தற்சமயம் தடுப்பு முகாம்களில் பட்டினி, நோய் போன்ற பேரவலங்களுக்கு உள்ளாகி வாழ்ந்துகொண்டிருக்கும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்குத் தேவையான மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதுடன், அகிம்சை முறையில் தமிழ் மக்கள் தமது போராட்டத்தை ஒன்றிணைந்து மேலெடுத்துச் செல்ல வேண்டும் என்பது அவரது உரையின் சாராம்சமாக இருந்தது.

இந்த அவலநிலையை மாற்ற புலம்பெயர் தமிழ்ச் சமூகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை விளக்கியும், இன்னும் அதிகரித்த பங்களிப்புக்கான அவசியத்தை வலியுறுத்தியும் காட்சியளிப்பு, உரைகள் நிகழ்த்தப்பட்டன. இப்பேரவலத்தின் ‘தற்கால நிலையும், முன்னோக்கிய நகர்வும்' என்பதை மையப்பொருளாகக் கொண்டு கேள்வி-பதில் கலந்துரையாடல் நடந்தது.

பணிகளில் பங்கேற்கவும் நன்கொடை அளிக்கவும் பார்க்க வேண்டிய வலைப்பக்கம்: www.tnc-usa.org
கனகசபை சிவராமன்,
சான் ரமோன், கலி.
More

நிஹாரிகா, அல்பா ஸாங்கவி பரதநாட்டிய அரங்கேற்றம்
சுதீக்ஷணா வீரவல்லி பரதநாட்டிய அரங்கேற்றம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: பெருஞ்சாலைப் பராமரிப்பு
அட்லாண்டாவில் FeTNA தமிழ் விழா
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி வட அமெரிக்க விஜயம்
கலைமாமணி ரங்கநாயகி ஜெயராமன் வழங்கும் நாட்டிய நாடகம்
மானஸா ரவி பரதநாட்டிய அரங்கேற்றம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: வாகனப் பராமரிப்பு செயற்பட்டறை
Share: 




© Copyright 2020 Tamilonline