Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஹரிமொழி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
வார்த்தை சிறகினிலே
இலங்கை எதிரிகள் குடியிருக்கும் கோட்டை
- அரவிந்த்|ஆகஸ்டு 2009|
Share:
இலங்கை இப்போது நம்முடைய எதிரிகள் குடியிருக்கும் கோட்டையாக மாறிக்கொண்டு இருப்பதை இந்தியா முதலில் உணர வேண்டும். சீனாவும் பாகிஸ்தானும் அங்கு நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்து விட்டன. இந்தப் பேராபத்து இன்னும் சில மாதங்களில் வெளிச்சத்துக்கு வரப் போகிறது.
- டாக்டர் ராமதாஸ்

எந்தப் பெற்றோரும் உடை, பண்பாடுகள் பற்றி தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு எந்த போதனைகளும் செய்வதில்லை. பெண்களை ஆபாச நுகர்வுப் பண்டமாகப் பார்க்கும் போக்கிலிருந்து, தங்கள் ஆண் பிள்ளைகளைப் பெற்றோர்கள் மீட்டெடுக்க வேண்டும்.
- அருள்மொழி, வழக்கறிஞர்

ஏழைகளுக்கு உதவி செய்வது பற்றி எல்லா சமயமுமே ஒருமித்த கருத்தைச் சொல்கிறது. ஏழைகளின் எதிர்பார்ப்புகளை வசதி படைத்தவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். கல்வி, மருத்துவம் - இவை இரண்டும் இதுவரை இல்லாத மக்களிடம் போய்ச்சேர வேண்டும்.
- நா. மகாலிங்கம்

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி 2004ம் ஆண்டில் இந்தியாவில் 3.3 கோடி நீரிழிவு நோயாளிகள் இருந்தனர். 2030ம் ஆண்டில் உலகத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நீரிழிவு நோயாளிகள் (8 கோடி) இந்தியாவில் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- குலாம் நபி ஆசாத்
அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline