Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
 View Comments
திருமணம் என்பது உடலுறவு மட்டுமல்ல....-Jun 2010
4 Comments
By: chandra mouli (United States) Feb 07, 2011 - My other reviews << Return to Article
திருமதி சித்ரா எப்போதும் போல மிக நல்ல அறிவுரையை தந்திருக்கிறார். நம் இந்திய கலாசாரத்தில் (தென் மாநிலங்களிலாவது) நமக்காக வாழ்வது என்பதைவிட மற்றவர்களுக்காக வாழ்வது என்பதையே முக்கியமாக எண்ணும் வழக்கம் இருக்கிறது. இளம் வயதில் விதவையானால் அப்படியே வாழ்க்கையைக் கழித்துவிட வேண்டும் என்பது மிகவும் மடத்தனம் இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில்.. இப்போது புறம் பேசும் சமூகம், அந்த இளம் விதவைக்கு எந்த அளவு உதவியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகம் இது! சித்ரா சொலவது போல ஒரு கம்பேனியன்ஷிப்புக்காகச் சற்று வயதான விதவைப்பெண் ஒரு ஆண் துணையத் தேடிக்கொள்வதில் என்ன தவறு என்று எனக்குப் புரியவில்லை. அதுவுமல்லாமல் அது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை; அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. நம் தமிழ் நாட்டில், அரசியல்வாதிகளோ அல்லது சினிமாத்துறையில் இருப்பவர்களோ பலதார மணம் செய்துகொண்டால் கூட ஒப்புக்கொள்ளுகிற சமுதாயம், விதவை மறுமணத்தைக் கேவலமாக நினைப்பது ஆச்சரியமே! அதே சமயம் ஒரு 25 வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்ததால் என் எண்ணம் மாறிவிட்டது என்றே நினைக்கிறேன் இந்தியாவிலேயே இருந்திருந்தால் இப்படி எழுதியிருப்பேனா என்பது சந்தேகமே.

By: Kaviyogi Vedham (India) Aug 25, 2010 - My other reviews << Return to Article
இந்தச் சிக்கல் விஷயத்தில் சரியான கோணத்தில் ஆராய்ந்து பதில் சொன்ன சித்ரா அவர்களை யானும் பாராட்டுகின்றேன். எல்லோரும் இவ்வுலகில் தன்னையே(sex)விஷயத்திலும் கூட நினைத்து, தன்னைத்தானே பாராட்டிக்கொள்கிறார்களே தவிர மற்றவர்க்கும் தனிமையும், வெறுமையும் நாளடைவில் கசந்துபோகும், அதற்காகவாவது எந்தப்பெண்க்கும் ஒரு துணை தேவை என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். சமுதாயம் கேலி பேசுமே என்ற பதட்டம் இந்தியாவில்தான் இருக்கிறது. இக்கருத்தை யான் சில நாடுகள் சுற்றிப்பார்த்தவன் என்ற கோணத்தில் சொல்கின்றேன்.அந்த அம்மா செய்தது தவறே இல்லை.செக்ஸ் இன்மையும் வெறுமை எண்ணங்களும் வேறு தவறான பாதையில் போகத்தூண்டும். அதுவன்றி எந்த வயதிலும் ஒரு நல்ல துணை தேடுவது என்பது எக்காலத்துக்கும் பொருந்துவது ஒன்றே.

By: rajeesubramania (Egypt) Jul 03, 2010 - My other reviews << Return to Article
மாமியாரை தன்னுடன் வைத்து கொள்ள முடியாவிட்டாலும் அவர்களை அவமான படுத்த வேண்டாம்.மகன் அம்மாவிடம் பேசக்கூட முடியாத அளவுக்கு வேலை பளுவா?வாரம் ஒருமுறை கூடப் பேச முடியாத நிலையில் அந்தத் தாய் என்னதான் செய்வாள்? மருமகளிடம் நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த தாய்க்கு யார் இருக்கிறார்கள் ஒரே ஒரு மகனைத் தவிர?கண்டிப்பாக அந்தத் தாய் தாம்பத்திய சுகத்திற்குத் திருமணம் செய்து கொண்டு இருக்க மாட்டாள் .மேலும் பெண்ணே உன் தாயார் உன்னிடம் உன் மாமியார் சிறு பெண் போல அலங்காரம் செய்து கொண்டு இருக்கிறார் என்று பேசலாமா? தப்பு இல்லையா? பெண்களே பெண்களுக்கு எதிரிகளாக இல்லாமல் சூழ்நிலையை புரிந்துகொண்டு இப்பொழுதாவது உங்களின் குறைகளையும் உணருங்கள். உங்கள் மாமியாரை நீங்கள் உங்கள் பெற்றோருக்கு கொண்டாடும் அறுபதாவது விழாவில் கூப்பிடுங்கள். நீங்களும் உங்கள் கணவரும் செய்யும் ஒரே பிராயச்சித்தம் இதுதான். வாழ்க வளர்க சித்ரா அவர்கள்.

By: Jeya Maran (United States) Jun 03, 2010 - My other reviews << Return to Article
I always like Ms. Chihra Vaitheeswaran's counseling. This one is the best especially she tried to make that young lady understand the difference between tradition and narrow mindedness. Even today in the not modernized Tamil Nadu villages, young widows are being arranged in marriage to young widowers or divorcees by their parents.Villages are the live examples for our true culture, tradition and broad mindedness. Only we are confuesd. Of course we are modern age people.





© Copyright 2020 Tamilonline