Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சாதனையாளர் | அமெரிக்க அனுபவம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | அஞ்சலி | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சென்னையில் திருவையாறு
லாஸ் ஏஞ்சலஸில் தியாகராஜ உத்ஸவம்
வளைகுடாப் பகுதித் தமிழ்க் கிறிஸ்தவ சமூகம் - பொங்கல் விழா
பிளேனோவில் பொங்கல் விழா
சிவகங்கை மோஹன் இசைக் கச்சேரி
TEAM உறுப்பினர் கூட்டம்
கிரீன்வில்லில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
சிகாகோ தமிழ் சங்கத்தின் புதிய செயற்குழு
வளைகுடாப் பகுதியில் தமிழர் திருநாள்
தாரிணியின் நடன அரங்கேற்றம்
- சீதா துரைராஜ்|பிப்ரவரி 2006|
Share:
Click Here Enlargeஜனவரி 21, 2006 அன்று சான்ஹொசே CET மையத்தில் தாரிணி சுப்ரமணியத்தின் நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.

ஐயப்ப வந்தனத்தை அடுத்து நாட்டையில் நளினமுடன் நடராஜர் காலடியில் புஷ்பாஞ்சலி செய்தது நல்ல ஆரம்பம். 'அருள்மழை' எனும் விநாயகர் பாடலுக்கு ஆடிய பின் ஜதி ஸ்வரத்தில் நல்ல தீர்மானம், தாளக்கட்டுடன் இணைந்து ஆடித் திறமையை வெளிப் படுத்திய விதம் சிறப்பு.

அடுத்து 'சிவகாமசுந்தரி' எனும் பாடலில் 'என்னைச் சோதிக்க வேண்டாம்' என்னும் இடத்தில் காண்பித்த முகபாவம் உருக்கமாக இருந்தது. தொடர்ந்து தண்டாயுதபாணி அவர்களின் வர்ணத்துக்குத் தாளம் பிசகாமல் துள்ளலுடன் ஆடி அவையோரை மகிழவைத்தார்.

'அறுபடை வீடமர்ந்த' என்னும் ராக மாலிகை பாடலுக்கான அபிநயம் நிகழ்ச்சி யின் சிகரமாக அமைந்தது. மாற்றி மாற்றி வெவ்வேறு ரசங்களைக் கொணர்ந்ததில் மாணவியின் திறமை பளிச்சிட்டது.
'என்ன தவம் செய்தனை' (பாபநாசம் சிவன்), 'மாலைப் பொழுதினிலே' (கல்கி கிருஷ்ணமூர்த்தி) ஆகிய பாடல்களுக்கு கண்ணன், முருகன் சிறப்புகளை அழகாகச் சித்தரித்தார். விறுவிறுப்பான தில்லானா வுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

காதுக்கினிய பாடல்கள், சிறந்த பக்க வாத்யம், பாடல்களின் பொருள் புரிந்து, தன்னம்பிக்கையுடன் உழைத்து ஆடிய மாணவி, குருவின் சிறந்த பயிற்சி எல்லாம் சேர்ந்து சிறப்பானதொரு அரங்கேற்ற நிகழ்ச்சியை வழங்கின.

சீதா துரைராஜ்
More

சென்னையில் திருவையாறு
லாஸ் ஏஞ்சலஸில் தியாகராஜ உத்ஸவம்
வளைகுடாப் பகுதித் தமிழ்க் கிறிஸ்தவ சமூகம் - பொங்கல் விழா
பிளேனோவில் பொங்கல் விழா
சிவகங்கை மோஹன் இசைக் கச்சேரி
TEAM உறுப்பினர் கூட்டம்
கிரீன்வில்லில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
சிகாகோ தமிழ் சங்கத்தின் புதிய செயற்குழு
வளைகுடாப் பகுதியில் தமிழர் திருநாள்
Share: 




© Copyright 2020 Tamilonline