Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | நூல் அறிமுகம் | அஞ்சலி | ஜோக்ஸ்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
ஸ்ரீ ராம லலிதகலா மந்திர் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா
அமிர்தா ஹரிஹரன் பரத நாட்டிய அரங்கேற்றம்
அமெரிக்கத் தமிழ் மருத்துவக் கழகத்தின் 5வது மாநாடு
நடன அரங்கேற்றம்
மஹீதா பரத்வாஜ் கீபோர்ட் கச்சேரி
விநாயக சதுர்த்திக்கு லக்ஷ்மிநாராயணா இசைப்பள்ளி கச்சேரி
சௌந்தர்யா நாராயணன் கர்நாடக இசை அரங்கேற்றம்
நார்த்-சௌத் அறக்கட்டளையின் ஸ்பெல்லிங் பீ போட்டி
ஸ்ருதிஸ்ரீ சுகுமார் பரத நாட்டிய அரங்கேற்றம்
ராதிகா ஐயர் பரதநாட்டிய அரங்கேற்றம்
- சீதா துரைராஜ்|அக்டோபர் 2009|
Share:
Click Here Enlargeசெப்டம்பர் 12, 2009 அன்று ஸாரடோகா உயர்நிலைப் பள்ளி மெக்பீ அரங்கத்தில் லாஸ்யா டான்ஸ் கம்பெனி மாணவி ராதிகா ஐயரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது.

குரு, கணேச தியானம், கம்பீர நாட்டையில் புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. 'ப்ரணமாம்யஹம்' என்ற மைசூர் வாசுதேவாசார்யாவின் பாடலுக்கு கௌரிபுத்ரனை மிக அழகாக அபிநயித்தார் ராதிகா. தொடர்ந்த முருகன் மீதான பாரதியின் பாடல்களுக்கு ஐந்து ராகங்களில், வடிவேலனை 'குருவாக வந்து கவலைக் கடலைக் களைவாய்' என உருக்கத்துடன் அபிநயித்த விதம் சிறப்பு. பின் லால்குடி ஜெயராமனின் வர்ணத்துக்கு குழலூதும் மாதவனைத் தாளகதி தவறாமல் அபிநயித்தது நேர்த்தி. தொடர்ந்து பஞ்ச பூத ஈஸ்வரர்களை ஐந்து ராகம், ஐந்து தாளங்களில் பாடிப் பாராட்டைப் பெற்றார். 'சிவாய நம ஓம்' என கண்ணப்ப நாயனாரின் பக்தி பாவத்தைக் காண்பித்தது தத்ரூபம்.

அடுத்து 'பாவயாமி கோபால பாலம்' எனும் அன்னமாசார்யா கீர்த்தனைக்கு உறியிலிருந்து வெண்ணெய் எடுத்துத் தின்பதை பாவபூர்வமாக அபிநயித்தது வெகு அழகு. இறுதியாக தர்மபுரி சுப்பராயர் இயற்றிய ஜாவளி, ரங்கநாயகி ஜயராமன் இயற்றிய தில்லானா யாவும் கன கச்சிதம். மாணவியின் அரங்கேற்றத்திற்கான பெருமை குரு வித்யா சுப்ரமண்யம் அவர்களைச் சாரும். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அவர் பரதத்தின் தஞ்சாவூர் பாணியைப் பற்றி விவரித்தது பயனுள்ளதாக இருந்தது.
ஆஷா ரமேஷ் (குரலிசை), சாந்தி-நாராயண் (வயலின்-மிருதங்கம்), வித்யா சுப்ரமண்யம் (நட்டுவாங்கம்) என பக்கவாத்தியங்கள் யாவும் நிகழ்ச்சிக்கு மிக்க உறுதுணையாக இருந்தன.

சீதா துரைராஜ்,
சான் ஹோசே, கலி.
More

ஸ்ரீ ராம லலிதகலா மந்திர் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா
அமிர்தா ஹரிஹரன் பரத நாட்டிய அரங்கேற்றம்
அமெரிக்கத் தமிழ் மருத்துவக் கழகத்தின் 5வது மாநாடு
நடன அரங்கேற்றம்
மஹீதா பரத்வாஜ் கீபோர்ட் கச்சேரி
விநாயக சதுர்த்திக்கு லக்ஷ்மிநாராயணா இசைப்பள்ளி கச்சேரி
சௌந்தர்யா நாராயணன் கர்நாடக இசை அரங்கேற்றம்
நார்த்-சௌத் அறக்கட்டளையின் ஸ்பெல்லிங் பீ போட்டி
ஸ்ருதிஸ்ரீ சுகுமார் பரத நாட்டிய அரங்கேற்றம்
Share: 




© Copyright 2020 Tamilonline