Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
அஞ்சலி
ஸ்டெல்லா புரூஸ்
மகரிஷி மஹேஷ் யோகி
பாபா ஆம்தே
- அரவிந்த்|ஏப்ரல் 2008|
Share:
Click Here Enlargeகாந்தியவாதியும், தொழுநோயாளிகளின் துயர் துடைப்பதையே தமது வாழ்நாள் லட்சியமுமாகக் கொண்டவருமான முரளிதர் தேவதாஸ் ஆம்தே என்னும் பாபா ஆம்தே பிப்ரவரி மாதம் காலமானார். அவருக்கு வயது 94. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட தொழுநோயாளிகளின் நலம் காக்கத் தம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டதுடன், பல்வேறு சேவை அமைப்புகளையும் உருவாக்கி வழிநடத்தினார் ஆம்தே.

வழக்கறிஞராகத் தமது வாழ்க்கையைத் தொடங்கிய ஆம்தே, காந்தியக் கொள்கை களால் ஈர்க்கப்பட்டார். சுதந்திரப் போராட் டத்தில் கலந்து கொண்டார். பின்னர் சமூக சேவகராகத் தன் வாழ்க்கையைத் தொடர்ந் தார். 'சத்தியத்தின் வீரர்’ என்று மகாத்மா காந்தியடிகளால் பாராட்டப் பெற்ற ஆம்தே, தொழுநோயாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தார். பாரத இளைஞர்களை ஒருங்கிணைக்கும் ’பாரத் ஜோடோ’ என்ற அமைப்பைத் துவங்குவதில் ஈடுபட்டிருந்த அவர், ரத்தப் புற்றுநோயால் காலமானார்.

அவர் மறைந்து விட்டாலும் அவரது சேவைக்குச் சான்றாக என்றும் இருக்கும், மகாராஷ்டிராவின் வரோராவில் அவர் உருவாக்கிய 'ஆனந்தவனம்' ஆசிரமம்.
அரவிந்த்
More

ஸ்டெல்லா புரூஸ்
மகரிஷி மஹேஷ் யோகி
Share: 




© Copyright 2020 Tamilonline