Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | தமிழறிவோம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
மிலன் நடத்திய கொடை நடை
நந்தலாலா அறக்கட்டளையின் இளையோர் இசைமழை
ஜனனி முரளிதரனின் கர்நாடக இசை அரங்கேற்றம்
நித்யா ராம் பரத நாட்டிய அரங்கேற்றம்
யாத்ரிகா அஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
வருண் சிவக்குமார் கர்நாடக இசை அரங்கேற்றம்
அம்பிகா கோபாலன் பரத நாட்டிய அரங்கேற்றம்
கார்த்திகா கணேசன் பரத நாட்டிய அரங்கேற்றம்
கவிதா விஜயசேகரின் பரத நாட்டிய அரங்கேற்றம்
சுவாமி சுகபோதானந்தாவின் வளைகுடாப் பயணம்
சிகாகோவில் பாலமுரளி கிருஷ்ணா - பண்டிட் அஜாய் சக்ரவர்த்தி ஜுகல்பந்தி
வசந்த் ராமச்சந்திரன் கர்நாடக இசை அரங்கேற்றம்
- சீதா துரைராஜ்|அக்டோபர் 2007|
Share:
செப்டம்பர் 2, 2007 அன்று ஸாரடோகா உயர்நிலைப்பள்ளி கலையரங்கில் வசந்த் ராமசந்திரன் அவர்களின் கர்நாடக இசை அரங்கேற்றம் நடைபெற்றது.

'ஸாமி நின்னே' (பந்துவராளி) வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பித்தது. 'வரவல்லப' (ஹம்சத் வனி) என்னும் ஜி.என்.பி. அவர்களின் பாடல் தொடர்ந்தது. சுருதி சுத்தத்துடன் தொடங்கிப் பாடிய 'வா முருகா வா' (பேகடா) கேட்க விறுவிறுப்பாக இருந்தது.

அடுத்துப் பாடிய 'ஆனந்தாம்ருத' (அமிர்த வர்ஷணி) என்னும் முத்துஸ்வாமி தீட்சிதர் கிருதி சிறிது பயத்துடன் ஆரம்பித்தாலும் தொண்டடை சூடு பிடித்த பின்னர் ராக ஆலாபனை கச்சிதமாக அமைந்தது. மேல் ஸ்தாயியில் நிற்கும் போது சுருதியுடன் இணைந்து பாடிய விதம், சங்கதிகளை சுரஸ்தானம் பிசகாமல் அழுத்தம் கொடுத்து வித்தியாசப்படுத்திப் பாடிய விதம் தெளிவாக, நன்றாக இருந்தது. 'சந்திரசேகர' என்னும் மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் பாடல் கேட்க இதம். 'ஜனனி நின்னு வினா' (ரீதிகெளளை) ராகப்பாடலை கீழ்ஸ்தாயியில் அசைவு கொடுத்துப் பாடியவிதம் உருக்கம்.

'ஓ ரங்கசாயீ' (காம்போதி) பாடலில் ஆலாபனை, நிரவல், கற்பனா ஸ்வரம் யாவும் கச்சிதமாகக் கையாளப்பட்டது. பாவத்துடன் பாடிய விதம் கேட்க ரம்யம். ராக ஆலாபனையில் தன்னம்பிக்கையுடன் பாடினால் மேலும் எடுப்பாக இருக்கும்.

'இன்னுதய பாரதே', 'குறை ஒன்றுமில்லை' இரு பாடல்களும் நல்ல விறுவிறுப்புடனும் அனுபவித்து உருக்கமாகப் பாடியவிதம் அவையோரால் நன்கு ரசிக்கப்பட்டது. கன்னட, தெலுங்கு உச்சரிப்பு யாவும் சுத்தமாக இருந்தது.
மதுவந்தி ராகத் தில்லானா, பஜனைப் பாடல் யாவும் கேட்க மனதுக்குச் சுகம். நல்ல பாடாந்தரம். சிறந்த முறையில் குரு ஜெயஸ்ரீ தாசரதி அவர்கள் பயிற்சி அளித்திருக்கிறார்.

வயலின் வாசித்த அருண் ராமமூர்த்தி அவர்கள் அமிர்தவர்ஷிணி ராகத்துக்கு அருமையாக வாசித்து அசத்தினார். மிருதங்கம் வாசித்த ரமேஷ் சீனிவாசனின் தனி ஆவர்த்தனம் பிரமாதம். இருவரின் ஒத்துழைப்பில் கக்சேரி களை கட்டியது.

சீதா துரைராஜ்
More

மிலன் நடத்திய கொடை நடை
நந்தலாலா அறக்கட்டளையின் இளையோர் இசைமழை
ஜனனி முரளிதரனின் கர்நாடக இசை அரங்கேற்றம்
நித்யா ராம் பரத நாட்டிய அரங்கேற்றம்
யாத்ரிகா அஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
வருண் சிவக்குமார் கர்நாடக இசை அரங்கேற்றம்
அம்பிகா கோபாலன் பரத நாட்டிய அரங்கேற்றம்
கார்த்திகா கணேசன் பரத நாட்டிய அரங்கேற்றம்
கவிதா விஜயசேகரின் பரத நாட்டிய அரங்கேற்றம்
சுவாமி சுகபோதானந்தாவின் வளைகுடாப் பயணம்
சிகாகோவில் பாலமுரளி கிருஷ்ணா - பண்டிட் அஜாய் சக்ரவர்த்தி ஜுகல்பந்தி
Share: 




© Copyright 2020 Tamilonline