Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
பாட்டு
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - பாட்டு
காட்டில் ஊஞ்சல்கள்
- தங்கப்பா|செப்டம்பர் 2003|
Share:
யானைக் குட்டி மலையப்பன்,
எலியின் குட்டி சுண்டு,
பூனைக்குட்டி புல்லையா
புலியின் குட்டி வேங்கை.

நாலு பேரும் காட்டோரம்
நடந்து வழி போனார்கள்.
ஆலமர நிழலிலே
அமர்ந்து களைப்பாறினார்.

ஊஞ்சலாட எண்ணினார்.
ஓணான் கொடியைப் பின்னினார்.
ஊஞ்சல் நல்ல ஊஞ்சலாம்
தனித் தனியே ஊஞ்சலாம்.
ஆல மரத்தில் ஊஞ்சலாம்
ஆனைக்குட்டி ஆடவே!
வேல மரத்தில் ஊஞ்சலாம்
வேங்கைக் குட்டி ஆடவே!

புன்னை மரத்தில் ஊஞ்சலாம்
பூனைக் குட்டி ஆடவே
என்ன மரத்தில் ஊஞ்சலாம்
எலிக் குட்டிக்குச் சொல்வாயே!

தங்கப்பா
Share: 




© Copyright 2020 Tamilonline