Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நலம்வாழ
குடல் எரிச்சல் (Irritable Bowel Syndrome)
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்|ஜனவரி 2017|
Share:
Click Here Enlargeஅடிக்கடி வயிற்று உபாதையால் அவதிப்படுவோர் பலர். பெரிதாகக் குடல்புண் போல இல்லாவிட்டாலும், வயிற்று உபாதை அழையா விருந்தாளியாக வந்து இவர்கள் அவதிப்படுவர். இதற்கு ஆங்கிலத்தில் Irritable bowel syndrome என்று பெயர்.

குடல் எரிச்சல்
பெயருக்கு ஏற்றாற்போல் வயிற்றில் எரிச்சல் ஏற்படும். சிலருக்கு பித்தம், உப்புசம், வயிறு வீங்குதல் போலவும், சிலருக்கு மலச்சிக்கல், அல்லது வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். சிலருக்கு இந்த அறிகுறிகள் மாறி, மாறி வரலாம். ஒரு சில உணவுப் பொருட்கள் இந்த அறிகுறிகளை அதிகரிக்கும்.. பெரும்பாலும் இவர்கள் உணவுப் பழக்கத்தில் மாற்றம் கொண்டுவருவதன் மூலம் பிரச்சனையைக் கட்டுக்குள் வைக்கலாம். ஒரு சிலருக்கு மாத்திரைகள் தேவைப்படும்.

அறிகுறிகள்
வயிற்று உப்புசம் அல்லது வீங்குதல். ஆங்கிலத்தில் Bloating என்று சொல்வர்.
மலச்சிக்கல்
வயிற்றுப்போக்கு
வயிற்றுவலி - குறிப்பாக உணவுண்ட பின்பு வயிறு வலிக்கும். சில மணி நேரத்தில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வலி குறையும்.

இந்த அறிகுறிகள் மாதத்தில் மூன்று முறையாவது ஏற்படும். அதுபோல் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இருந்தால் அவர்களுக்கு இந்த நோய் இருக்கலாம். இதைத் தவிரவும் வலிக்கும் விதம், அது வயிற்றுப்போக்கின் பிறகு குறைவது, IBS இருப்பதை உறுதிசெய்யும்.

யாருக்கு வரும்?
யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குறிப்பாகப் பெண்களுக்கு அதிகம் ஏற்படும். இளவயதில் ஆரம்பிக்கும். 50 வயதுக்குமேல் இந்தத் தொந்தரவுகள் ஆரம்பித்தால் மேற்கொண்டு பரிசோதனை அவசியம். மன உளைச்சல் அதிகம் இருப்போருக்கும், கவலைப்படுவோருக்கும் வரலாம். மன அழுத்தம், வெளியில் சொல்லமுடியாத கவலை முதலியவை வயிற்றுச் செயல்பாட்டைப் பாதிக்கலாம்.

எதனால் வருகிறது?
இந்த நோயில் வயிற்றுப் பகுதியிலும், குடலிலும் எந்தவிதப் புண்ணோ, மாறுபாடோ இருப்பதில்லை. ஆனால் வயிற்றையும், குடலையும் பராமரிக்கும் நரம்புகள் அதீதமாகவோ அல்லது மிகக்குறைவாகவோ வேலை செய்யும்போது வயிற்றுப்போக்கோ, மலச்சிக்கலோ ஏற்படலாம். நரம்புகள் தளர்வது மன உளைச்சலில் அதிகம் காணப்படும். இவர்களுக்குப் படபடப்பும், இதயத்துடிப்பு அதிகரிப்பதும் சகஜம். கோபம் அதிகம் வருவதும், சோகம் தாக்குவதும் இவர்களின் குண இயல்பு. இவை யாவும் நரம்புமண்டலத்தை பாதிக்கும்.
எந்த உணவுப் பொருட்கள் இந்த உபாதையை அதிகப்படுத்தலாம்?
இது ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆனாலும் பெரும்பாலும் அஜீரணம் ஏற்படுத்தும் உணவுகள் கீழ்வருமாறு.

சில பயறுவகைகள் - பச்சைப்பயறு, மொச்சை, ராஜ்மா முதலியவை
காலிஃப்ளவர்
முட்டைக்கோஸ்
பிராக்கொலி
பால்

சில தானிய வகைகள் குறிப்பாக கம்பு, கேழ்வரகு போன்ற நார்ப்பொருள் அதிகமுள்ள தானியங்கள். இப்போது அமெரிக்காவில் பிரபலமான கீன்வா தானியமும் ஏற்படுத்தலாம். Rye பிரட் போன்ற நார்ப்பொருள் அதிகமுள்ள ரொட்டி வகைகள். இதைத் தவிரவும் அவரவர்க்கென்றே ஒருசில உணவுகள் உபாதையை ஏற்படுத்தலாம்.

தீர்வுமுறைகள்
எந்த உணவு உபாதை அளிக்கிறதோ அதைத் தவிர்ப்பதே சிறந்த தீர்வு. இதைக் கண்டுபிடிப்பது முதலில் சற்றுச் சிரமமாய் இருக்கலாம். தினமும் என்னென்ன உண்கிறோம் என்பதை எழுதி வைத்தல் நலம். எப்போதெல்லாம் வயிற்றுவலி வருகிறது என்பதையும் குறித்து வைத்துக்கொண்டால் இதைச் சுலபத்தில் கண்டுபிடித்து விடலாம். மலச்சிக்கல் இருப்பவர் தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும். நார்ப்பொருள் அதிகம் சாப்பிடவேண்டும். இதைக் காய்கறிகள், பழங்கள் மூலம் உண்ணலாம்.

வயிற்றுப்போக்கு அதிகம் இருந்தால், இதற்கு மாறாகச் சாப்பிட வேண்டும். அரிசிச்சாதம், உருளைக்கிழங்கு போன்றவை உதவும். தினமும் Fiber 1 என்ற பொடியைத் தண்ணீரில் கலந்து குடிப்பது உதவும். இதையும் மீறி உபாதை அதிகமானால் மருத்துவர் மருந்துகள் தரலாம்.

தியானம், படபடப்பு, மன அழுத்தம் குறைய யோகம் போன்றவை செய்தால் அதுவும் உதவும். இந்த நோய் சின்ன வயதில் வந்தாலும், அவ்வப்போது தொந்தரவு செய்தாலும், இதனால் புற்றுநோய் போன்ற விபரீத விளைவுகள் ஏதும் ஏற்படாது. ஆனால் இந்த உபாதைகளுடன் மலத்தில் ரத்தம் வருவது, உடல் எடை குறைவது போன்ற அபாய அறிகுறிகள் இருந்தால் Colonoscopy தேவைப்படும்.

உணவே மருந்து என்று சரியான உணவைச் சரியான வேளையில் சரியான அளவு உண்டால் இந்த நோயைக் கட்டுக்குள் வைக்கலாம்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்,
கனெக்டிகட்
Share: 




© Copyright 2020 Tamilonline