Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | அஞ்சலி | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்
சொற்கள்
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
எது நன்னெறி
- ஜெயகாந்த் ராமமூர்த்தி|அக்டோபர் 2002|
Share:
மூன்றரை வயது நிரம்பிய என் மகளுக்கு மம்மு (உணவு) ஊட்ட, அவளும், என் அம்மாவும் ஒரு தீர்மானம் செய்து கொண்டனர். அதாவது, ஒரு நாள் பாட்டி கதை சொல்ல பேத்தி கேட்பாள், மறு நாள் பேத்தி கதை சொல்ல பாட்டி கேட்க வேண்டும் என்பது தான் அது.

அன்று பாட்டி கதை சொல்ல வேண்டிய முறை. பாட்டி வடை செய்தது தொடங்கி, காக்கா பாட்டியை ஏமாற்றியது மற்றும் நரி காக்காவை ஏமாற்றி வடையை பறித்து சென்றது வரை சொல்லி முடித்து, ஒரு நல்ல கருத்தை சொன்ன திருப்தியடைந்தாள் என் அம்மா.

சரி, மறு நாளோ பேத்தி கதை சொல்ல வேண்டிய முறையல்லவா? அவள் தொடங்கினாள் "ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துதாம், அந்த காக்காக்கு ரொம்ப பசிச்சுதாம், அது அந்த ஊர்ல வடை தட்டற பாட்டிகிட்ட போய், பாட்டி எனக்கு ஒரு வடை குடு, ரொம்ப பசிக்கறதுன்னு கேட்டுதாம். அந்த பாட்டியும் காக்காக்கு ஒரு வடை குடுத்தாளாம். அந்த வடைய காக்கா சாப்டுண்டு இருந்தப்போ, அங்க வந்த நரி, காக்கா எனக்கும் பசிக்கறது, கொஞ்சம் வடை குடுன்னு கேட்டுதாம். உடனே, அந்த காக்கா நரியை பாட்டி கிட்ட கூட்டிண்டு போய், பாட்டி இந்த நரிக்கும் பசிக்கறதாம், அதுக்கும் ஒரு வடை குடுன்னு கேட்டுதாம். பாட்டி, நரிக்கும் ஒரு வடை குடுத்தாளாம். அப்பறம் ரெண்டுமா சமர்த்தா சாப்டுட்டு போய்டுத்தாம் என்று சொல்லி கதையை அவள் முடிக்க, ஓ, இதைத் தான் 'Peaceful Co-existence' என்று சொல்கிறார்களோ என்று எண்ணி திகைத்து கொண்டு இருந்தோம்.
ஜெயகாந்த் ராமமூர்த்தி
Share: 




© Copyright 2020 Tamilonline