Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிரிக்க சிரிக்க | ஜோக்ஸ் | விளையாட்டு விசயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க, சிந்திக்க | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
மாயாபஜார்
கேரளத்து விஷு சமையல்
காளன்
பீன்ஸ் துவரன் (தோரன்)
ஔலன்
எரிசேரி
பாலடைப் பிரதமன்
- சரஸ்வதி தியாகராஜன்|ஏப்ரல் 2007|
Share:
தேவையான பொருட்கள்
அடைத்துண்டங்கள் - 1 கிண்ணம்
பால் - 3 கிண்ணம்
இனிப்பான கண்டென்ஸ்டு பால் - 1
சர்க்கரை - தேவைக்கேற்ப
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
நெய் - 2 தேக்கரண்டி
சிறியதாகக் கீறிய தேங்காய்த் துண்டங்கள் - சிறிதளவு
செய்முறை

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் விட்டு அதைக் கொதிக்கவிடவும். கொதித்ததும் இந்த அடையைப் போட்டு அடுப்பிலிருந்து இறக்கி மூடவும். 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரை வடிகட்டி விடவும்.

அடி கனமான பாத்திரத்தில் பாலை விட்டு கொதிவந்ததும் இந்த அடைகளைப் போட்டு ஒருமணி நேரம் குறைந்த சூட்டில் சமைக்கவும்.

அடிக்கடி மென்மையாகக் கிளறி இவை ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளாமலும் அடிப்பிடிக்காமலும் பார்த்துக் கொள்ளவும். பின்னர் சர்க்கரை சேர்த்த குறுக்கிய பாலை விட்டுக் கலக்கவும்.

தேவையான அளவு சர்க்கரையைச் சேர்த்து மேலும் ஒரு 15 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் இறக்கி வைக்கவும். நெய்யில் தேங்காய்த் துண்டங்களைப் பொன்னிறமாக வறுத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து விடவும். நேந்திரம் பழம் கொண்டு பழப்பிரதமனும் செய்யலாம். இதில் பாலுக்கு பதில் தேங்காய்ப்பால் சேர்த்துச் செய்ய வேண்டும்.

சரஸ்வதி தியாகராஜன்
More

கேரளத்து விஷு சமையல்
காளன்
பீன்ஸ் துவரன் (தோரன்)
ஔலன்
எரிசேரி
Share: 




© Copyright 2020 Tamilonline