Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர்
Tamil Unicode / English Search
குறுக்கெழுத்துப்புதிர்
நவம்பர் 2008: குறுக்கெழுத்துப்புதிர்
- வாஞ்சிநாதன்|நவம்பர் 2008|
Share:
Click Here Enlargeகுறுக்காக:
3. கனி கொடு, ராஜா ஆயுதபாணியாய் வந்தால் தேவாலயம் (5)
6. பிரம்மனுடைய பொய்சாட்சி கீழேசெல்ல இறுதியில் பள்ளம் உலகம் (4)
7. அரேபியாவில் தண்டனை நிறைவுபெறாத சையது வெளியே பல்லால் தாக்கு (4)
8. சுந்தரி இடையைத் தழுவும் ராசி மலர்களில் இருக்கும் (6)
13. தூய்மையற்ற, இடையற்ற அனர்த்த மாசு கிளறப்படும் (6)
14. சுற்றிச் சுற்றி வர குழவி நடு (4)
15. அவ்விடம் சுற்றிக் கடைசியாய் ஓட ஆணைக்குக் கட்டுப்படு (4)
16. தினமும் சிக்கிய ஆறு கடைசியில் பேருந்துகள் ஓடா இடம் (5)

நெடுக்காக:
1. சுநயனாவின் வளர்ப்புமகளா? இல்லை மாப்பிள்ளையாம் (5)
2. முழுமையான மலர், பாடலின் பகுதியைச் சிதைத்தது (5)
4. புதல்வியை இழந்த மக்கள் வேட்கை சூழ்ந்த விளைவு (4)
5. அலைகடல் மீது சென்று தேட வேண்டியது முதலிழந்து சிதைந்தெல்லாம் வீண் (4)
9. சுந்தரி, சுந்தரி, நீ வைத்துள்ள நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது (3)
10. அரசனால் பிரயோஜனமில்லை என்றாலும் ராவணனைக் கொல்வதற்குப் பயன்பட்டது (5)
11. சுழியில்லா உனக்கு வேதம் பொருந்தினாலும் ஆதங்கம் (5)
12. துன்பத்தில் சிக்கி ஏரோட்ட, கன்று தலையின்றி வந்தது (4)
13. கற்ற நெசவாளரின் கருவி படகில்லா அந்தோணி கவிழ்த்தது (4)

'குறுக்கும் நெடுக்கும்' கூகிள் குழுமத்தில் (kurukkum nedukkum@googlegroups.com) இணைய வாரீர்.

இணையத்தில் குறுக்கெழுத்துப் புதிரை உருவாக்கி தங்கள் வலைப்பதிவில் பலரும் வெளியிட ஆரம்பித்துள்ளனர். முன்பே குறிப்பிட்ட இலவசக் கொத்தனார் (elavasam.blogspot.com), யோசிப்பவர் (yosinga.blogspot.com), ஜீவ்ஸ் (kaladi.blogspot.com) ஆகிய மூவர் புதிர்களிலும் அச்செடுக்காமல் வலைப்பக்கத்திலேயே விடைகளை நிரப்பும் தொழில்நுட்ப வசதி இருக்கிறது. ஒவ்வொருவர் கையெழுத்து மாறுபடுவதுபோல் புதிரமைப்பிலும் ஒவ்வொருவர் பாணி மாறுபடுவதைக் காணலாம். இன்னும் பலரும் இம்முயற்சியில் தீவிரமாக இறங்கினால் எல்லோருடைய புதிரும் மெருகேறும். புதிர் ஆர்வலர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

vanchinathan@gmail.com
நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை நவம்பர் 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. நவம்பர் 15-க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

அக்டோபர் 2008 புதிர் மன்னர்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline