Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
ராகசித்ரா கலை நிலையம் வழங்கிய நியூயார்க் இந்திய இசைவிழா
ஸ்ரீக்ருபா நடனக் குழுமம்: ராமாயண நாட்டிய நாடகம்
சிகாகோ தியாகராஜ உற்சவம்: கர்நாட சங்கீதம் போட்டிகள்
டெட்ராயிட் பாலாஜி கோவில் கல்யாண உத்சவம்
அஷ்வின் ஸ்ரீநிவாசன் கர்நாடக இசை அரங்கேற்றம்
லஷ்மிநாராயணா இசைப்பள்ளி பிள்ளையார் சதுர்த்தி
ஸ்வேதா ஸ்ரீதர் பரதநாட்டிய அரங்கேற்றம்
கர்நாடிகா சகோதரர்கள் கச்சேரியில் பாலாஜி கிரிதரன் மிருதங்க அரங்கேற்றம்
மனைவியர் போற்றும் விழா
சஹானா கிருபாகரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
டெற்றாயிட் பெருநிலத்தில் ஷீரடி சாயிபாபா கோவில்
ஷரண்யா பரதநாட்டிய அரங்கேற்றம்
- செல்லம் ஸ்ரீனிவாசன்|அக்டோபர் 2008|
Share:
Click Here Enlargeஆகஸ்ட் 23, 2008 அன்று, ஸ்ரீக்ருபா நடனப்பள்ளி மாணவி ஷரண்யாவின் அரங்கேற்றம் ஸாரடோகா உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. ஒன்பது வயதான ஷரண்யா, குரு ஸ்ரீமதி விஷால் ரமணியிடம் நூறாவதாக அரங்கேறும் மாணவி ஆவார். சிறுமி ஷரண்யாவின் நடனம் வெகு சிறப்பாக இருந்ததற்கு குரு விஷால் ரமணியின் உழைப்பும், பொறுப்பும், ஆசிகளும் மிக முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல.

ஆரபியில் அமைந்த விநாயகர் பதத்தின் நடனம் அருமை. ஸ்ரீ அசோக் சுப்ரமண்யத்தின் ப்ருந்தாவன சாராங்கா வர்ணம் அட தாளத்தில் களையாக இருந்தது. ஐம்பது நிமிட வர்ணத்தை அலுங்காமல் அழகான முகபாவத்தையும், சிறப்பான ஜதிகளையும் வைத்து, மிக அழகாக ஆடினார் ஷரண்யா. இந்த வர்ணத்திற்கும் இதுவே முதல் அரங்கேற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ ரஞ்சனியில் அமைந்த ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் பாடலில் கிருஷ்ண பரமாத்மாவை வெகு சிறப்பாக வர்ணித்து ஆடியது அனைவரையும் கவர்ந்தது. கமாஸ் ராகத்தில் அமைந்த ‘இடது பதம் தூக்கி' பாடலுக்கு ஷரண்யா அபிநயித்த விதம் அருமை. கௌளை ராக சக்தி பதத்தை முகபாவத்தில் வெகு அழகாகக் கொண்டு வந்து வர்ணித்தார் ஷரண்யா. தொடர்ந்த மாண்டு ராகத் தில்லானா நன்று. அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ வைரவன் அவர்கள், ஷரண்யாவை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். சென்னை ந்ருத்யோ பாஸன நடனப்பள்ளியைச் சேர்ந்த திருமதி ஹேமாராஜன் ஷரண்யாவின் நடனத் திறமையைப் புகழ்ந்தார்.
இந்தியாவிலிருந்து இதற்காகவே வந்திருந்த நட்டுவாங்கம், மிருதங்கம், வயலின் பக்க வாத்தியக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களின் ஒத்துழைப்பு நிச்சயம் பாராட்டத்தக்கது.

செல்லம் ஸ்ரீனிவாசன்
More

ராகசித்ரா கலை நிலையம் வழங்கிய நியூயார்க் இந்திய இசைவிழா
ஸ்ரீக்ருபா நடனக் குழுமம்: ராமாயண நாட்டிய நாடகம்
சிகாகோ தியாகராஜ உற்சவம்: கர்நாட சங்கீதம் போட்டிகள்
டெட்ராயிட் பாலாஜி கோவில் கல்யாண உத்சவம்
அஷ்வின் ஸ்ரீநிவாசன் கர்நாடக இசை அரங்கேற்றம்
லஷ்மிநாராயணா இசைப்பள்ளி பிள்ளையார் சதுர்த்தி
ஸ்வேதா ஸ்ரீதர் பரதநாட்டிய அரங்கேற்றம்
கர்நாடிகா சகோதரர்கள் கச்சேரியில் பாலாஜி கிரிதரன் மிருதங்க அரங்கேற்றம்
மனைவியர் போற்றும் விழா
சஹானா கிருபாகரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
டெற்றாயிட் பெருநிலத்தில் ஷீரடி சாயிபாபா கோவில்
Share: 




© Copyright 2020 Tamilonline