Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
தண்டவாளத்தின்மேல் அரண்மனை
தபால்தலை கௌரவம்
பாரத ரத்னா
சிறுத்து வரும் மனங்கள்
- அரவிந்த்|மார்ச் 2008|
Share:
மும்பை ஒரு சர்வதேச நகரம். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் அங்கே பணிசெய்து வருகிறார்கள். சிவசேனாவி லிருந்து பிரிந்து சென்ற ராஜ் தாக்கரே உருவாக்கியது நவநிர்மாண் சேனா. 'மும்பையில் வட மாநிலத்தவர் வந்து மும்பைக்காரர்களின் வேலைகளைப் பறித்துக் கொண்டுவிட்டார்கள்' என்று ஒரு குற்றச்சாட்டை அவர் திடீரென்று எழுப் பினார். சாலையோரத்தில் சாட் விற்பவர் களும், டாக்ஸி ஓட்டுநர்களும் கண்மண் தெரியாமல் நவநிர்மாண் சேனாவின் குண்டர்களால் தாக்கப்பட்டனர். பெரும் கலவரம் மூண்டது. பொதுச் சொத்து நாசமாக்கப்பட்டது. தாக்குதலுக்கு நடிகர் அமிதாப்பச்சனின் வீடும் தப்பவில்லை. பலர் உயிருக்கு பயந்து, ஓட்டம் பிடித்தனர். மகாராஷ்டிரமே கலவர பூமியாகக் காட்சி அளித்தது.

இந்நிலையில் ராஜ் தாக்கரேவின் வன்முறைப் பேச்சைக் கண்டித்து, அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் பெஞ்சின்முன் விசாரணைக்கு வந்த இம்மனுவின் தீர்ப்பில் நீதிபதிகள், 'இது ஒரே நாடு. இந்த நாட்டைத் துண்டாட நினைப்பதை அனுமதிக்க முடியாது. மண்ணின் மைந்தர் கொள்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்' என்று தீர்ப்பளித்தனர். சமுதாயத்தில் தற்காப்பற்ற ஒரு சிறு தரப்பினரை எதிரிகளாகச் சித்திரித்து, அவர்கள் மீது வன்முறையை அவிழ்த்துவிடும் ராஜதந்திரம் புதிதல்ல. தமது தலைமை மீது குருட்டு நம்பிக்கை கொண்டவர்களின் வாக்கு வங்கியை நோக்கி இவை செய்யப்படுகின்றன என்ற அபாயகரமான உண்மையை மும்பைச் சம்பவம் மீண்டும் நினைவுபடுத்துகிறது.
அரவிந்த்
More

தண்டவாளத்தின்மேல் அரண்மனை
தபால்தலை கௌரவம்
பாரத ரத்னா
Share: 




© Copyright 2020 Tamilonline