Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2006 Issue
ஆசிரியர் பக்கம் | வாசகர் கடிதம் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | விளையாட்டு விசயம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சுவாமி சுகபோதானந்தாவின் வளைகுடாப் பயணம்
வளைகுடாவில் ஒய்.ஜீ. மகேந்திரனின் இரட்டை மகிழ்ச்சி
ஸ்ருதி ஸ்வர லயாவின் கோடை பிரயாணம் (Summer Tour)
அரங்கேற்றம் - கல்பா விசுவநாதன்
டெலாவர் தமிழ்ச் சங்கத்தின் திருமறைப் பாடல் கச்சேரி!
சன்தீப் நாராயணனின் அநாயாசமான சஞ்சரிப்புகள்
அன்னப்பூர்ணா, ஷாலினி அரங்கேற்றம்
- ராமன் சக்கரவர்த்தி|ஆகஸ்டு 2006|
Share:
Click Here Enlargeஇந்த வருடம் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி நடைபெற்ற குமாரிகள் அன்னப்பூர்ணா, ஷாலினி ஆகியோர்களின் அரங்கேற்றம் Thasand Civic Arts and Plazaவில் நடைபெற்றது. இந்தச் சகோதரிகளின் தாயார் பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்தவர். தகப்பனார் இந்தியர். பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த இவர்களது தாயார் தங்கள் குழந்தைகளுக்கும் பரத நாட்டியம் கற்பிக்க ஆசைப்பட்டு, நாட்டியத்தில் இன்று சிறந்த குருவாக விளங்கும் திருமதி பத்மினி வாசனிடம் ஏழு வருடங்கள் பரதநாட்டியம் கற்க வைத்து அரங்கேற்றம் நடத்தி சாதனை ஒன்றை செய்திருக்கிறார்.

அரங்கேற்றத்துக்கு சுமார் இரண்டு மாதங் களுக்கு முன்பு செல்வி அன்ன பூர்ணாவின் காலில் ஏற்பட்ட சிறு விபத்தால் அவரால் தொடர்ந்து ஒருமாதத்திற்கு பயிற்சி செய்ய முடியாத நிலையிலும், தொடர்ந்து கடினமாக பயிற்சி எடுத்து, அரங்கேற்ற மேடையில் சிறப்பாக ஆடினார்.

செல்வி ஷாலினியும் தன் சகோதரியைப் போல் கடினமாக பயிற்சி எடுத்து நன்றாக ஆடினார். சங்கராபரண வர்ணம் இந்த நிகழ்ச்சிக்கென்றே புதிதாக குரு ஸ்ரீமதி பத்மினி வாசனால் தேர்வு செய்யப்பட்டு ஸ்வர வரிசைகளும் ஜதிகளும் இனிமையாக அமைந்து இருவரும் சிறப்பாக ஆடினார்கள். "போ சம்போ சிவசம்போ" எனும் ரேவதி ராகப்பாட்டுக்கு ஷாலினி ஆடிய நடனம் அந்த தில்லை நடராஜனே வியக்கும்படி இருந்தது. அன்னபூர்ணாவின் தோற்றமும், நாட்டியமும் அரங்கேற்றத்தை வெகுவாக மெருகேற்றியது.
பாபு பரமேஸ்வரன் வாய்ப்பாட்டு பாட, வினோத் வியலின் வாசிக்க, கிருஷ்ணகுமார் மிருதங்கம் வாசிக்க, மகாதேவன் புல்லாங்குழல் இசைக்க, இவைகளுடன் சகோதரிகளின் நாட்டியம் மிகவும் கச்சிதமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் குரு பத்மினி வாசனின் அனுபவமும், கடின உழைப்பும் சேர்ந்து நாட்டியத்தை பிரகாசிக்க வைத்தது என்றால் அதுமிகையல்ல.

ராமன் சக்கரவர்த்தி
More

சுவாமி சுகபோதானந்தாவின் வளைகுடாப் பயணம்
வளைகுடாவில் ஒய்.ஜீ. மகேந்திரனின் இரட்டை மகிழ்ச்சி
ஸ்ருதி ஸ்வர லயாவின் கோடை பிரயாணம் (Summer Tour)
அரங்கேற்றம் - கல்பா விசுவநாதன்
டெலாவர் தமிழ்ச் சங்கத்தின் திருமறைப் பாடல் கச்சேரி!
சன்தீப் நாராயணனின் அநாயாசமான சஞ்சரிப்புகள்
Share: 




© Copyright 2020 Tamilonline