Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | புழக்கடைப்பக்கம் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க சிரிக்க
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
நியூயார்க்கில் நிருத்ய சாகர் ஆண்டுவிழா
பாரதி கலாலயாவின் நன்றித் திருநாள்
சிகாகோவில் குழந்தைகள் தினவிழா
சிகாகோவில் மாவீரர் தினம்
விரிகுடாத் தமிழ் மன்றம் வழங்கிய குழந்தைகள் நிகழ்ச்சி
தென்கலி·போர்னியத் தமிழரின் தீபாவளி 2003
லாங் பீச்சில் இரண்டு தமிழ் நாடகங்கள்
அரங்கேற்றம்
மனோகர நடன வினோதினி
- ஆர். முரளிதரன்|ஜனவரி 2004|
Share:
Click Here Enlargeசெந்தமிழர் போற்றி வளர்த்த கலைகள் இன்று சொந்த மண்ணில் மட்டுமல்லாது அவர் வந்து வாழும் இடமெல்லாமல் வளர்ந்து வளமை குன்றாதிருப்பது நாம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுறக் கூடிய ஓர் விஷயம்.

அண்மையில் செல்வி. வினோதினி லக்ஷ்மணனின் நடன அரங்கேற்றம் நடைபெற்றது. அரங்கேற்றியவர் ஸ்ரீ கிருபா டான்ஸ் அகடமியின் கலை இயக்குநர் திருமதி. விஷால் ரமணி. காரைக்குடியைச் சூறையாடி மேடையை அலங்கரித்து விட்டார்களோ என்று எண்ணுமளவு மேடையலங்காரம் இருந்தது. தமிழகக் கலைஞர்கள் மதுரை முரளிதரன் - நட்டுவாங்கம், கோமதிநாயகம் - குரலிசை, தனஞ்செயன் - மிருதங்கம், ஷர்மா - வயலின் ஆகியோர் உடன் இசைத்தனர். நடுநாயகமாக விஷால் ரமணி.

கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்து டாக்டர் பாலமுளி கிருஷ்ணா அவர்களின் புஷ்பாஞ்சலி ஆரபியில் ஆரம்பிக்க நிகழ்ச்சி களைகட்டியது. தொடர்ந்தது 'தும்பிக்கையோனை' என்ற விநாயகர் அஞ்சலி நாட்டை ராகத்திலும், ஆதிதாளத்திலும். அதையடுத்து வந்த கல்யாணி ராக ஜதிஸ்வரம் பழமை விரும்பியான விஷால் ரமணியின் தேர்வு. அவர் அமைத்து இருந்த கோர்வைகள் மற்றும் நடைகள் மிக நன்றாக இருந்தன.

பின்னர் மைய நிகழ்ச்சியான வர்ணம். 'காணும் அரும்பேறு தருவாயோ?' என்னும் மதுரை முரளிதரன் இயற்றிய வர்ணத்திற்கான ஜதிக்கோர்வைகள் அதிவேகம். இறைவனுக்கு சாதிமதபேத வேற்றுமை இல்லை என்பதை உணர்த்தும் கண்ணப்ப நாயனாரின் கதையை சஞ்சாரி பாவத்தில் அபிநயத்த விதம் அருமை. அடுத்து, முருகன் தனக்கே சொந்தம் என நினைத்திருந்த நாயகியிடம் அன்றாடம் இரவல் கேட்டு வாழ்க்கை நடத்தும் மற்றொரு நாயகி இன்று முருகனின் தயவால் செல்வச் செழிப்புடன் இருப்பதைக் கேள்வியுற்றுப் பொறாமையுடன் பாடுவதாக அமைக்கப்பட்ட பழமையான பதம் 'அதும் சொல்லுவாள்' என்ற செளராஷ்டிர ராகப் பாடல். இதில் பொறாமையின் எல்லைக்கே நம்மை அழைத்துச் சென்றார் வினோதினி.

அடுத்து 'கண்ணன் வருகின்ற நேரம்' என்ற காவடிச்சிந்து, தொடர்ந்து தில்லானா, இறுதியாகக் காவடி ஆட்டம். உண்மையான காவடியை ஏந்தி வினோதினி ஆடி வந்தது நம்மை அறுபடை வீட்டிற்கே அழைத்துச் சென்றாற்போல் இருந்தது.
Click Here Enlargeவினோதினியின் மாமா லெட்சுமணன் ஒவ்வொரு பாட்டுக்கும் செய்த அறிமுகம் சுவைபட இருந்தது.

கவிதை பாடும் கண்கள், ஆடற்கலைக் கேற்ற உடல்வாகு, பேசும் விரல்கள், வேகம் இவற்றின் மொத்த நடனச் சித்திரமாய் விளங்கினார் வினோதினி. மொத்தத்தில் வினோதினியின் அரங்கேற்றம் வெகு விமரிசை.

மதுரை. ஆர். முரளிதரன்
More

நியூயார்க்கில் நிருத்ய சாகர் ஆண்டுவிழா
பாரதி கலாலயாவின் நன்றித் திருநாள்
சிகாகோவில் குழந்தைகள் தினவிழா
சிகாகோவில் மாவீரர் தினம்
விரிகுடாத் தமிழ் மன்றம் வழங்கிய குழந்தைகள் நிகழ்ச்சி
தென்கலி·போர்னியத் தமிழரின் தீபாவளி 2003
லாங் பீச்சில் இரண்டு தமிழ் நாடகங்கள்
அரங்கேற்றம்
Share: 




© Copyright 2020 Tamilonline