Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கவிதைபந்தல் | நூல் அறிமுகம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சின்னக்கதை
கர்ணன் மரணமும் தர்மராஜரின் துக்கமும்
- |பிப்ரவரி 2022|
Share:
பஞ்ச பாண்டவர்களில் மூத்தவனான கர்ணனுக்கு, தான் ஐவரின் சகோதரன் என்பது தெரியாது. பஞ்ச பாண்டவர்களுக்கும் இது தெரியாது. அதன் காரணமாக, கர்ணன் அவர்களை அடியோடு வெறுத்தான். அவர்களை அழிக்கத் துடித்தான். அவன் மட்டற்ற ஆற்றலோடு அவர்களை எதிர்த்துப் போராடத் தன்னைத் தயார் செய்துகொண்டான். அவனது ஐந்து தம்பிமார்களும் அவனைக் கொடிய எதிரியாகக் கருதி அழித்துவிடத் திட்டமிட்டனர். அவர்கள் அவனைக் கொன்றும் விட்டனர். கர்ணனின் மரணத்துக்குப் பிறகு அவன் தனது சகோதரன் என்பதை அறியவந்த தர்மராஜருக்கு அளவுகடந்த துக்கம் ஏற்பட்டது.

அவரால் தன்னைத் தேற்றிக்கொள்ளவே முடியவில்லை, அவரைத் துக்கம் வாட்டியது. உண்மை தெரிந்திருந்தால் அந்தத் துக்கத்தைத் தவிர்த்திருக்கலாமே, அல்லவா? அதுபோலவே, எல்லாப் பீடங்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது ஒரே கடவுள்தான் என்பதையும் அதே கடவுளின் அருள்தான் யாவரையும் ஊக்கி இயக்குகிறது என்பதையும் அறியாதவரை உனக்கு வெறுப்பும் கர்வமும் இருக்கும். அதை அறிந்து அனுபவித்துவிட்டால் உன்னில் அனைத்தின் மீதும் அன்பும் மரியாதையும் நிரம்பிவிடும். இந்த அடிப்படை சகோதரத்துவத்தை அந்தராத்மாவில் உணர்ந்துவிட்டால், போர் என்னும் காட்டுமிராண்டித்தனத்தை விட்டுவிடுவோம்.

நன்றி: சனாதன சாரதி, அக்டோபர் 2021
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா
Share: 




© Copyright 2020 Tamilonline