Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | பொது
Tamil Unicode / English Search
அஞ்சலி
பண்டிட் ஜஸ்ராஜ்
சுதாங்கன்
எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
அம்புலிமாமா சங்கர்
- |அக்டோபர் 2020|
Share:
கே.சி. சிவசங்கரன் என்ற ஒவியர் சங்கர் (96) சென்னையில் காலமானார். 'தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமனை' அம்புலிமாமாவிற்காக வரைந்து 'அம்புலிமாமா' சங்கர் ஆனார். தாராபுரம் அருகே உள்ள காலத்தொழுவூர் கிராமத்தில், ஜூலை 19, 1924 அன்று பிறந்தார். அப்பைய தீக்ஷிதர் பரம்பரையில் வந்த இவருக்கு இளவயதிலேயே ஓவிய ஆர்வம் வந்துவிட்டது. ஓவியப் பள்ளியில் (தற்போது ஓவியக் கல்லூரி) பயின்றார். படித்து முடித்ததும் 'கலைமகள்' இதழில் வேலை கிடைத்தது. சில ஆண்டுகளுக்குப் பின் அம்புலிமாமாவுக்கு வரையும் வாய்ப்பு தேடி வந்தது. 1953ல் அம்புலிமாமாவில் சேர்ந்தார். அந்த இதழ் நின்று போகும் வரை சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வரைந்திருக்கிறார். ராமகிருஷ்ண விஜயம் இதழுக்குத் தொடர்ந்து ஓவியங்கள் வரைந்தவர். தனது ஓவிய சாதனைகளுக்காக 'வாழ்நாள் சாதனையாளர் விருது' உள்பட பல்வேறு சிறப்புகள் பெற்றவர்.

அவரது சுவையான நேர்காணலை வாசிக்க
ஒரு ரிஷியைப்போல வாழ்ந்த சங்கர், இலக்கியம், வேதம், புராணம், சாஸ்திரம் போன்றவற்றில் ஆழமான பயிற்சி உடையவர். ரமண மஹரிஷியின் பக்தர்.
More

பண்டிட் ஜஸ்ராஜ்
சுதாங்கன்
எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
Share: 




© Copyright 2020 Tamilonline