Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
இல்லாத வீடு
கனவின் நகல்
அப்பாவின் பேச்சு
ஒற்றைத் திறவுகோல்
ஒரு பறவையை வரைவது
- சுந்தர்ஜி ப்ரகாஷ்|ஜனவரி 2019|
Share:
பறவையின் ஓவியம் ஒன்று
வரைய எத்தனிக்கிறேன்.

அது ஒருவேளை
பறந்துவிடக்கூடுமென்பதால்
ஆழ்ந்த உறக்கத்தில்
இருக்கும்போது
தூரிகையால் தொடுகிறேன்.

சிறகுகளுக்கான
இறுதிச்சொட்டு தீர்ந்த பின்
அதன் சிறகுகள்
மெல்ல அசைவதாய் உணர்கிறேன்.

பிறக்க இருக்கிற சில குஞ்சுகளை
ஓடுகள் உடைந்துவிடாமல்
கவனமாகக் கூட்டுக்குள்
வைக்கிறேன்.

இரவின் உணவு
ஒரு பெரும் விருந்தாய்
அமையட்டும் என
கூடுதலாகவே
தானியங்களை இரைக்கிறேன்.

தினமும் காலையில்
கூவவும் குஞ்சுகளைக்
கொஞ்சவும் இருக்கட்டும்
என தனித்தனியே
குரல்களை இணைக்கிறேன்.

பறவைகளோடு பேசும்
மனிதர்கள் இருவரை
எதற்கும் இருக்கட்டுமெனப்
பக்கத்தில் நிற்கவைத்துவிட்டு-

தூரிகைகளைக்
கழுவிக்கொண்டிருந்தேன்.

அந்தப் பறவை
மனிதனிடம் சொன்னது,

'காடுகளை இழந்த
என் வலியை
வரைய வண்ணங்கள்
இல்லை இவன் வசம்'
சுந்தர்ஜி ப்ரகாஷ்
More

இல்லாத வீடு
கனவின் நகல்
அப்பாவின் பேச்சு
ஒற்றைத் திறவுகோல்
Share: 




© Copyright 2020 Tamilonline