Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப் புதிர்கள்
- அரவிந்த்|ஜனவரி 2019|
Share:
1. 1 முதல் 9 வரை உள்ள எண்களைக் கொண்டு கூட்டியோ, கழித்தோ, பெருக்கியோ, வகுத்தோ கணிதச் சமன்பாடுகளைப் பயன்படுத்தி விடை 100 வரச்செய்ய வேண்டும். இயலுமா?

2. ராமுவிடமும், சோமுவிடமும் சம அளவு பணம் இருக்கிறது. ராமு எவ்வளவு கொடுத்தால், அவனைவிடச் சோமுவிடம் பத்து டாலர் அதிகமாக இருக்கும்?

3. ஒரு வருடத்திற்கு 365 நாள் என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த எண்ணின் சிறப்பு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?

4. இரண்டு எண்களுக்கிடை உள்ள வித்தியாசம் 3; அவற்றின் வர்க்கங்களின் வித்தியாசம் 51 என்றால் அந்த எண்கள் எவை?

5. ராஜா சில பூக்களை வாங்கிக்கொண்டு கோவிலுக்குச் சென்றான். ஒவ்வொரு கோவிலுக்குள்ளும் செல்வதற்கு முன்னால் அங்குள்ள குளத்தில் மூழ்கி வந்தான். ஆச்சரியப்படும்படி அவன் கையில் இருந்த பூக்கள் இரு மடங்காகின. ஒவ்வொரு கோவிலிலும் அவன் எட்டுப் பூக்களைச் சமர்ப்பித்தான். மூன்றாம் கோவிலை விட்டு வெளிவரும் போது அவன் கையில் பூக்கள் மீதமில்லை என்றால் முதலில் அவன் வாங்கிய பூக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline