Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2006 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | முன்னோடி | தமிழக அரசியல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா? | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
விக்ரம் பிரகாஷின் கர்நாடக இசை அரங்கேற்றம்
வளைகுடா பகுதி தமிழ் விளையாட்டு மையம் நடத்திய போட்டிகள்
ஆஷா நிகேதனின் நிதி திரட்டு நிகழ்ச்சி
விபா சுப்ரமணியம் நாட்டிய அரங்கேற்றம்
இலங்கைத் தமிழ் சங்கம் 29 ஆவது ஆண்டு விழா
தமிழ்நாடு அறக்கட்டளையின் நிதி பெருக்கும் விழா !
யுவபாரதி - நந்திதா ஸ்ரீராம் பரதநாட்டியம்
- சீதா துரைராஜ்|நவம்பர் 2006|
Share:
Click Here Enlargeஅக்டேபார் 15ந்தேதி 2006. ஞாயிறு மாலை 5 1/2 மணியளவில் சான்டாக்ளாரா Santa Clara Mission City Center for Performing Arts center-ல் யுவபாரதி ஸ்தாபனத்தின் ஆதரவில் நடந்த நந்திதா ஸ்ரீராம் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி கம்பீர நாட்டையில் மல்லாரி முழங்க, பின் ஓம் சாந்தி சாந்தி என வணங்கியதும் மகழ்ச்சிகரமான ஓர் ஆரம்பம்.

தொடர்ந்து 'அலருலு குரியக' என்னும் அன்னமாச்சார்யா கீர்த்தனை சங்கராபரண ராக பாடலில் அலர்மேல் மங்கையின் வர்ணனைகளை அலட்டிக்காமல் அனுபவித்து அனயாசமாக ஆடிய பாவம், அபிநயம் அருமை.

அடுத்து ஜயதேவரின் 11வது அஷ்டபதியில் கண்ணனின் தூதுவன் ராதையிடம், கண்ணன் ராதையை பிரிந்து படும் வேதனைகளை விவரித்து காட்டிய விதம் கனகச்சிதம்.

பின் தயானந்த சரஸ்வதி அவர்களின் ''போசம்போ'' எனும் ரேவதி ராக பாடலில் ''நிர்குண பரப்ரம்ம ஸ்வரூபா'' எனும் இடத்தில் உருக்கமான பாவம் காண்பித்து அவையோரை உருக வைத்தது உண்மை. சிவனின் சிறப்புகளை சித்தரித்தவிதம் சிறப்புடன் இருந்தது.

அடுத்ததாக 'மையாமோரி' எனும் ஆர்தாஸ் பஜனில் யசோதையிடம் உறியில் ஏறி வெண்ணை உண்டது நான் அல்ல என வெகுளித்தனமாக கெஞ்சும் கண்ணனை தத்ரூபமாக காட்டிய விதம் நிகழ்ச்சியின் உச்சம் எனலாம்.
தில்லனாவில் சிறந்த தாளகதி, அபிநயம், முகபாவம் ஆகியவற்றை திறமையும் விறுவிறுப்பாக ஆடி பின் காந்தி பிறந்த மாதத்தில் மகாத்மாவுக்கு பிடித்த 'வைஷ்ணவ ஜனதோ' பாடலுடன் மங்களம் பாடி முடித்தது பொருத்தமாக அமைந்தது. பாடல்களின் அர்த்தம் புரிந்து மூழ்கி சிறந்த முகபாவம் காண்பித்து உழைத்து ஆடியதில் குருவின் மாணவியின் திறமை, உழைக்கும் ஆர்வம் பளிச்சிடுகிறது. பாராட்டுக்கள்.

நிகழ்ச்சியின் முதலில் நடந்த 1 மணி நேர குச்சிபுடி நடன நிகழ்ச்சியை சோனியா ஸாங்கா அருமையாக ஆடி ரசிகர்களை அசத்தினர். பின் இன்றைய பிரதம விருந்தினரான Sri Rama Lalitha Kala Mandir School of Fine Arts பள்ளியின் தலைவர் திருமதி ஜெயஸ்ரீ வரதராஜன் அவர்கள் ஆற்றிய உரையில் வளைகுடா பகுதிவாழ் இளைய சமுதாயத்தில் மாணவ மாணவிகள் எவ்விதம் நமது புராதன கலைகளை கற்று சிறந்த கலைஞர்களாக உருவாகி வருகிறார்கள் எனவும் யுவபாரதி ஸ்தாபனம் இளைஞர்களை ஆதரித்து கலைநிகழ்ச்சி களை அளிக்கின்றனர்.

ஆகவே வளைகுடா வாழ்மக்கள் ஸ்தாபனத்தை ஆதரிக்கும் வகையில் ஸ்பான்சர் செய்ய முன் வர வேண்டும் என கேட்டு கொண்டதுடன் நிகழ்ச்சி இனிது முடிந்தது.

சீதா துரைராஜ்
More

விக்ரம் பிரகாஷின் கர்நாடக இசை அரங்கேற்றம்
வளைகுடா பகுதி தமிழ் விளையாட்டு மையம் நடத்திய போட்டிகள்
ஆஷா நிகேதனின் நிதி திரட்டு நிகழ்ச்சி
விபா சுப்ரமணியம் நாட்டிய அரங்கேற்றம்
இலங்கைத் தமிழ் சங்கம் 29 ஆவது ஆண்டு விழா
தமிழ்நாடு அறக்கட்டளையின் நிதி பெருக்கும் விழா !
Share: 




© Copyright 2020 Tamilonline