Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சமயம்
அஞ்சலி | சிரிக்க சிந்திக்க | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
டென்னசி: ஆதியோகி பிரதிஷ்டை
TNF: CT ரிதம்ஸின் 'தாளலயா'
மீனாட்சி திருக்கோவில் நிகழ்ச்சி
சிகாகோ: 'பெருமாளே' நாடகம்
சிருங்கேரி வித்யா பாரதி: பாரதி விழா
விரிகுடாப்பகுதியில் விநாயக சதுர்த்தி
அரங்கேற்றம்: நிவேதா நாச்சியப்பன், பிரவீணா கிருஷ்ணப்ரசாத்
அன்னை வேளாங்கண்ணி திருவிழா
மினசோட்டா: தமிழ்க் கலை, பண்பாட்டுப் பட்டறை
அரங்கேற்றம்: ஸ்ரீஹரி பாஸ்கர்
அரங்கேற்றம்: மிஹிகா ஸ்ரீதர்
கச்சேரி: ஸ்ரீநிதி ஸ்ரீதரன்
- அலமேலு மணி|அக்டோபர் 2015|
Share:
ஆகஸ்ட் 30, 2015 அன்று டொரொன்டோ தமிழிசைக் கலாமன்ற அரங்கத்தில் இளைஞர் ஸ்ரீநிதி ஸ்ரீதரன் அருமையான கச்சேரி ஒன்றை வழங்கினார். திருமதி அலகாநந்தாவிடம் ஆரம்பித்த பாடம், பிறகு திருமதி. ராஜி கோபாலகிருஷ்ணனிடம் தொடர்ந்தது. பல மேடைகளில் பாடிப் பயிற்சிபெற்றது கச்சேரியில் நன்றாகப் புலப்பட்டது.

நாட்டைக்குறிஞ்சியில் "சலமேலரா"வில் தொடங்கி, அடுத்து ஹிந்தோளத்தில் விஸ்தாரமாக "சரஸ்வதி விதியுவதி" பாடினார். வலசியில் "ஸ்ரீவல்லி தேவசேனாபதே" கேட்டதும் ஒரு சந்தோஷம். நடபைரவியில் நீண்ட ஆலாபனை அவரது முதிர்ச்சியைக் காட்டுவதாக அமைந்தது. மேலேமேலே போய் உச்சத்தில் சுருதியும் ஸ்வரமும் நூல் பிடித்தாற்போல் நின்றபோது எழுந்த கரவொலி நிற்கச் சில நிமிடங்களாயின. சுகமான கர்ணரஞ்சனிக்குப் பின் சங்கராபரணத்தைப் பிழிந்து சாறெடுத்துப் பருகக் கொடுத்துவிட்டார் ஸ்ரீநிதி. அப்படி ஒரு ஆலாபனை. குரு திருமதி, ராஜி கோபாலகிருஷ்ணன் அங்கே இருந்திருந்தால் அப்படியே மகிழ்ச்சியில் விம்மியிருப்பார்.

ராகமாலிகையில் அனுமனைப் பாடி, பெஹாக் ராகத் தில்லானாவுடன் கச்சேரியை நிறைவுசெய்தார். அவர் க்ளீவ்லாண்டில் பலமுறை பரிசு வாங்கியதன் காரணம் அன்றைக்குப் புலப்பட்டது. சென்ற வருடம் கணிதத்திலும், பிசினஸிலும் இரட்டைப் பட்டம் வாங்கிய இவர், நல்ல வேலையிலு ம் இருந்துகொண்டு இசையையும் தொடர்ந்து போற்றிவருவது பாராட்டத் தக்கது.
மயூரன் கிரிதரன் (வயலின்), கார்த்திக் கைலாஷ் (மிருதங்கம்) இருவருமே நல்ல பக்கபலம். தமிழிசை மன்றத் தலைவர் திரு. தம்பையா ஸ்ரீபதி பேசும்போது "இசையில் விருப்பங்கொண்ட எவராயினும் இந்த இடத்தை உபயோகிக்கலாம், அதுவும் இலவசமாக", என்றபோது இசைக்காகப் பாடுபடும் ஒரு தொண்டரைக் காணமுடிந்தது. இறுதியில் திருமதி. நவராஜகுலம் முத்துகுமாரசாமி, திருமதி. கெளசல்யா சுப்பிரமணியம் ஆகியோர் பாராட்டிப் பேசினர்.

அலமேலு மணி,
டொரொன்டோ, கனடா
More

டென்னசி: ஆதியோகி பிரதிஷ்டை
TNF: CT ரிதம்ஸின் 'தாளலயா'
மீனாட்சி திருக்கோவில் நிகழ்ச்சி
சிகாகோ: 'பெருமாளே' நாடகம்
சிருங்கேரி வித்யா பாரதி: பாரதி விழா
விரிகுடாப்பகுதியில் விநாயக சதுர்த்தி
அரங்கேற்றம்: நிவேதா நாச்சியப்பன், பிரவீணா கிருஷ்ணப்ரசாத்
அன்னை வேளாங்கண்ணி திருவிழா
மினசோட்டா: தமிழ்க் கலை, பண்பாட்டுப் பட்டறை
அரங்கேற்றம்: ஸ்ரீஹரி பாஸ்கர்
அரங்கேற்றம்: மிஹிகா ஸ்ரீதர்
Share: 




© Copyright 2020 Tamilonline