Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | முன்னோடி | சாதனையாளர்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம் | பொது | நூல் அறிமுகம் | ஹரிமொழி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
மிச்சிகன்: 'சகா' நாட்டிய நாடகம்
பாரதி தமிழ்ச் சங்கம்: ஓவியப் போட்டி
இந்திய கிறிஸ்துவ ஆலயம்: கிறிஸ்துமஸ்
விரிகுடாக் கலைக்கூடம்: திருக்குறள் போட்டி
அட்லாண்டா தமிழ் சபை: கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள்
- போதகர் பால்மர் பரமதாஸ்|டிசம்பர் 2014|
Share:
அட்லாண்டா தமிழ் சபையினர், நன்றியறிதலின் (Thanksgiving) நாட்கள் முடிந்தவுடன் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலைநேரத்தில் வீடு வீடாக, சபை போதகர் பால்மர் பரமதாஸ் அவர்களுடன் போய் கிறிஸ்துமஸ் துதிப்பாடல்களைப் பாடி, நற்செய்திகளைக் கூறுவார்கள். தமது இல்லங்களுக்கும் அழைக்க விரும்பினால் pastor@atlantatamilchurch.org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

சபையின் பாடல் குழுவினர் சிறப்பு கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடும் நிகழ்ச்சி டிசம்பர் 7ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு நடைபெறும். அன்று தஞ்சாவூரில் போதகராக இருக்கும் Rev. J. Jayachandran (Grace Assemblies of God) தேவச்செய்தி வழங்குவார்கள். சபையின் ஞாயிறு பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சி (Children & Youth Christmas Service) டிசம்பர் 14ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு நடைபெறும். முடிவில் கிறிஸ்துமஸ் தாத்தா சிறு பிள்ளைகளுக்கு வெகுமதிகளை அளிப்பார். குடும்பப் பாடல் ஆராதனை (Family Sing Song Service) நிகழ்ச்சியில் கிறிஸ்துமஸ் மற்றும் பக்திப் பாடல்கள் டிசம்பர் 21ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு தமிழ்சபை தேவாலயத்தில் நடைபெறும்.

கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளின் உச்சக்கட்டமாக டிசம்பர் 25ம் தேதி வியாழன் காலை 10:00 மணிக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். அதில் தொழுதகு. பால்மர் பரமதாஸ் அவர்கள் விசேச செய்தி அளிப்பார்கள். பாடல்குழுவினர் சிறப்புப் பாடல்களைப் பாடுவார்கள். மதியம் கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்படும்.
2014ம் வருடத்தை ஆலயத்தில் தொடங்கிய நாம், புதுவருடத்தையும் ஆலயத்தில் ஆரம்பிக்கும் வண்ணம் டிசம்பர் மாதம் 31ம் தேதி புதன் இரவு 10:30 மணிக்கு விசேசித்த காத்திருப்பு ஆராதனை (Watchnight Service) நடைபெறும்.

மேலும் விபரங்களுக்கு: www.atlantatamilchurch.org

போதகர் பால்மர் பரமதாஸ்,
அட்லாண்டா
More

மிச்சிகன்: 'சகா' நாட்டிய நாடகம்
பாரதி தமிழ்ச் சங்கம்: ஓவியப் போட்டி
இந்திய கிறிஸ்துவ ஆலயம்: கிறிஸ்துமஸ்
விரிகுடாக் கலைக்கூடம்: திருக்குறள் போட்டி
Share: 




© Copyright 2020 Tamilonline