அட்லாண்டா தமிழ் சபை: கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள்
அட்லாண்டா தமிழ் சபையினர், நன்றியறிதலின் (Thanksgiving) நாட்கள் முடிந்தவுடன் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலைநேரத்தில் வீடு வீடாக, சபை போதகர் பால்மர் பரமதாஸ் அவர்களுடன் போய் கிறிஸ்துமஸ் துதிப்பாடல்களைப் பாடி, நற்செய்திகளைக் கூறுவார்கள். தமது இல்லங்களுக்கும் அழைக்க விரும்பினால் pastor@atlantatamilchurch.org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

சபையின் பாடல் குழுவினர் சிறப்பு கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடும் நிகழ்ச்சி டிசம்பர் 7ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு நடைபெறும். அன்று தஞ்சாவூரில் போதகராக இருக்கும் Rev. J. Jayachandran (Grace Assemblies of God) தேவச்செய்தி வழங்குவார்கள். சபையின் ஞாயிறு பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சி (Children & Youth Christmas Service) டிசம்பர் 14ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு நடைபெறும். முடிவில் கிறிஸ்துமஸ் தாத்தா சிறு பிள்ளைகளுக்கு வெகுமதிகளை அளிப்பார். குடும்பப் பாடல் ஆராதனை (Family Sing Song Service) நிகழ்ச்சியில் கிறிஸ்துமஸ் மற்றும் பக்திப் பாடல்கள் டிசம்பர் 21ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு தமிழ்சபை தேவாலயத்தில் நடைபெறும்.

கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளின் உச்சக்கட்டமாக டிசம்பர் 25ம் தேதி வியாழன் காலை 10:00 மணிக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். அதில் தொழுதகு. பால்மர் பரமதாஸ் அவர்கள் விசேச செய்தி அளிப்பார்கள். பாடல்குழுவினர் சிறப்புப் பாடல்களைப் பாடுவார்கள். மதியம் கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்படும்.

2014ம் வருடத்தை ஆலயத்தில் தொடங்கிய நாம், புதுவருடத்தையும் ஆலயத்தில் ஆரம்பிக்கும் வண்ணம் டிசம்பர் மாதம் 31ம் தேதி புதன் இரவு 10:30 மணிக்கு விசேசித்த காத்திருப்பு ஆராதனை (Watchnight Service) நடைபெறும்.

மேலும் விபரங்களுக்கு: www.atlantatamilchurch.org

போதகர் பால்மர் பரமதாஸ்,
அட்லாண்டா

© TamilOnline.com