Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிரிக்க சிரிக்க | ஜோக்ஸ் | விளையாட்டு விசயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க, சிந்திக்க | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
மாயாபஜார்
கேரளத்து விஷு சமையல்
காளன்
ஔலன்
எரிசேரி
பாலடைப் பிரதமன்
பீன்ஸ் துவரன் (தோரன்)
- சரஸ்வதி தியாகராஜன்|ஏப்ரல் 2007|
Share:
இந்த தோரனை கேரளத்தின் சில பாகத்தில் பொடிதூவல் என்றும் சொல்லுவர்.

தேவையான பொருட்கள்

பீன்ஸ் (சிறிய துண்டங்களாக நறுக்கியது) - 2 கிண்ணம்
தேங்காய் - அரை மூடி
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - சிறிதளவு
செய்முறை

தேங்காயைத் துருவி எடுத்துக் கொண்டு, பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், சீரகம் இவற்றுடன் சேர்த்து கரகரப்பாகத் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் நறுக்கிய பீன்ஸ் துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.

காய் நன்றாக வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய், மிளகாய் கலவையைப் போட்டு நன்றாகக் கிளறவும்.

ஒரு பெரிய கரண்டியில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்துப் போடவும்.

கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டுக் கிளறி உடனே இறக்கவும் காயை நுண்ணலை அடுப்பிலோ அல்லது பிரஷர் குக்கரிலோ வேகவைத்துக்கொள்ளலாம்.

சரஸ்வதி தியாகராஜன்
More

கேரளத்து விஷு சமையல்
காளன்
ஔலன்
எரிசேரி
பாலடைப் பிரதமன்
Share: 




© Copyright 2020 Tamilonline