Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
அட்லாண்டா: இசைப் போட்டிகள்
சிகாகோ: தமிழ்ப் பள்ளிகள் ஆண்டு விழா
'விநாயகர்' நாட்டிய நாடகம்
அட்லாண்டா தமிழ்ப் பள்ளிகள் ஆண்டு விழா
லட்சுமி தமிழ் பயிலும் மைய ஆண்டு விழா
ஜப்பான் சுனாமி நிவாரண இசை நிகழ்ச்சிகள்
பாரதி தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் புத்தாண்டு விழா
அரிசோனா: மெல்லிசை மாலை
கிளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனை
CMANA இசை விழா
புஷ்பாஞ்சலி டான்ஸ் அகாடமி: 15ம் ஆண்டு விழா
சிகாகோ: ஸ்ரீராம நவமி
- |ஜூன் 2011|
Share:
ஏப்ரல் 30, 2011 அன்று சிகாகோ ஸ்ரீ பாலாஜி கோவில் ஸ்ரீராம நவமியை ஒட்டி ஜயந்தி சாவித்ரியின் ஹரிகதை மற்றும் லாவண்யா அனந்த்தின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஆகியவற்றை வழங்கியது. இசை, கதை, கவிதை, தத்துவம் என எல்லாவற்றையும் இணைத்து வெகு அழகாக 'சீதாராம கல்யாணம்' ஹரிகதையை வழங்கிய ஜயந்தி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அன்னமாசார்யா திட்டத்தின் கலைஞர் ஆவார்.

அடுத்து பரதநாட்டியம் ஆடிய லாவண்யா 'நிருத்ய சமர்ச்சிதா' என்ற தலைப்பிலான நிகழ்ச்சியை வழங்கினார். இந்நிகழ்ச்சியை 'நிருத்யா டான்ஸ் தியேடர்', 'நிருத்யாஞ்சலி ஸ்கூல் ஆஃப் டான்ஸ்' மற்றும் 'நிருத்ய சங்கீத் ஸ்கூல் ஆஃப் டான்ஸ்' ஆகியவை இணைந்து வழங்கின. பிருந்தாவன சாரங்கியில் நிருத்யாஞ்சலியுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், அடுத்து 'தேவி ஸ்துதி' வந்தது. இதற்கு துர்கா, சாம்பவி, அம்பிகா, ராஜேஸ்வரி, மீனாட்சி போன்ற அம்பிகையின் பல்வேறு ரூபங்களைச் சிறப்பாக அபிநயித்தார். தண்டாயுதபாணிப் பிள்ளை அவர்களின் ராகமாலிகையில் அமைந்த 'சாமியை அழைத்தோடி வா' வர்ணத்துக்கு அவர் காட்டிய ரசங்கள் வெகு நேர்த்தி. அடுத்து அவர் சித்திரித்த அர்தநாரீஸ்வர தத்துவம் எவ்வாறு இயற்கையில் ஆண்மையும் பெண்மையும் இணைந்தே காணப்படுகிறது என்பதை எழிலோடு காண்பித்தது. விறுவிறுப்பான தில்லானோவோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
செய்திக் குறிப்பிலிருந்து
More

அட்லாண்டா: இசைப் போட்டிகள்
சிகாகோ: தமிழ்ப் பள்ளிகள் ஆண்டு விழா
'விநாயகர்' நாட்டிய நாடகம்
அட்லாண்டா தமிழ்ப் பள்ளிகள் ஆண்டு விழா
லட்சுமி தமிழ் பயிலும் மைய ஆண்டு விழா
ஜப்பான் சுனாமி நிவாரண இசை நிகழ்ச்சிகள்
பாரதி தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் புத்தாண்டு விழா
அரிசோனா: மெல்லிசை மாலை
கிளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனை
CMANA இசை விழா
புஷ்பாஞ்சலி டான்ஸ் அகாடமி: 15ம் ஆண்டு விழா
Share: 




© Copyright 2020 Tamilonline