Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நலம் வாழ | எனக்குப் பிடிச்சது
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
பவித்ரா நாகராஜன் பரத நாட்டிய அரங்கேற்றம்
லாவண்யா பரதநாட்டிய அரங்கேற்றம்
அருண் கௌசிக் இசை அரங்கேற்றம்
ஸ்நேஹா பராநந்தி கர்நாடக இசை அரங்கேற்றம்
லக்ஷ்யா பாலகிருஷ்ணன் பரதநாட்டிய அரங்கேற்றம்
பூர்வி சத்யா பரதநாட்டிய அரங்கேற்றம்
ஸ்நேஹா ஜெயப்பிரகாஷ் பரதநாட்டிய அரங்கேற்றம்
சான் டியேகோவில் வைகாசித் திருவிழா
நட்சத்திரங்களுடன் விருந்து
வித்யா சுந்தரம் பரதநாட்டியம்
- |செப்டம்பர் 2010|
Share:
ஜூலை 10, 2010 அன்று, ரெட்வுட் சிடியில் உள்ள கன்யாடா கல்லூரியில் தமிழ் நாடு டேங்கர் அறக்கட்டளைக்கு (Tamilnadu Tanker Foundation) நிதி திரட்டுவதற்காக வித்யா சுந்தரத்தின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இசைமேதை திரு ஜி.என். பாலசுப்ரமணியம் அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இந்த நிகழ்ச்சி ’வரவல்லப ரமண’ என்ற ஹம்ஸத்வனி ராகப் பாடலுடன் துவங்கியது. ராஜூ வாசுதேவன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து திஸ்ர ஏக தாள அலாரிப்பு. கல்யாணி ராக ஜதீஸ்வரத்திற்குப் பிறகு ஸ்ரீரஞ்சனி ராகத்தில் அமைந்த பாபநாசம் சிவனின் ‘ஸ்வாமி நீ மனமிரங்கு’ என்ற பாடலுக்கு வித்யா ஆடிய விதம் சிறப்பு.

பின்னர் ஜி.என்.பி. அவர்களைப் பற்றி கலா ஐயர் சிறப்புரையாற்றினார். அடுத்து ஜி.என்.பி.யின் பாடல்களுக்குச் சிறப்பாக ஆடினார் வித்யா. ’உன்னடியே கதி’ என்ற பஹதார ராகத்திற்குப் பிறகு, ஜி.என்.பிக்கு மிகவும் பிடித்த பாடலான ‘சொன்னதைச் செய்திட சாகசமா’ என்ற அவரது இசைத் தட்டையே ஒலிபரப்பி ஆடியது பொருத்தமான அஞ்சலிதான். ஹம்ஸாநந்தி ராகத் தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
சென்னையிலிருந்து வந்திருந்த கே.பி.யசோதா (நட்டுவாங்கம்), கே.பி. ராமகிருஷ்ணன் (வாய்ப்பாட்டு), கே.பி. ரமேஷ்பாபு (மிருதங்கம், தபேலா), வளைகுடாக் கவிஞர் கோவிந்த் ராகவன் (வயலின்) ஆகியோர் பக்கம் வாசித்தனர்.

நிகழ்ச்சியின்மூலம் திரட்டப்பட்ட $2000 நிதி Tamilnadu Kidney Research Foundation என்ற டேங்கர் அமைப்புக்கு அளிக்கப்பட்டது. இது 1993ல், வசதியற்ற ஏழைக் குடும்பத்தினரின் சிறுநீரகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. நிதி உதவி அளிக்க விரும்புபவர்கள் tanker@tankerfoundation.org என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.

செய்திக் குறிப்பிலிருந்து
More

பவித்ரா நாகராஜன் பரத நாட்டிய அரங்கேற்றம்
லாவண்யா பரதநாட்டிய அரங்கேற்றம்
அருண் கௌசிக் இசை அரங்கேற்றம்
ஸ்நேஹா பராநந்தி கர்நாடக இசை அரங்கேற்றம்
லக்ஷ்யா பாலகிருஷ்ணன் பரதநாட்டிய அரங்கேற்றம்
பூர்வி சத்யா பரதநாட்டிய அரங்கேற்றம்
ஸ்நேஹா ஜெயப்பிரகாஷ் பரதநாட்டிய அரங்கேற்றம்
சான் டியேகோவில் வைகாசித் திருவிழா
நட்சத்திரங்களுடன் விருந்து
Share: 




© Copyright 2020 Tamilonline