Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | முன்னோடி | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
அட்லாண்டா தமிழ் சபை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
டல்லாஸ் மெரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி
கேல்வஸ்டனில் சூறாவளி நிவாரணம்
காலேஜ்வில் குமோன் பரிசளிப்பு விழா
மிசௌரி தமிழ்ச் சங்கம் முத்தமிழ் விழா
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
ஈஷா யோகா பவுண்டேஷனின் மஹிமா சென்டர்
சிகாகோ லெமாண்ட் ஆலத்தில் தங்கமுருகன் திருவிழா
- |ஜனவரி 2009|
Share:
Click Here Enlargeடிசம்பர் 13, 2008 அன்று தங்க முருகன் திருவிழா சிகாகோவில் உள்ள லெமாண்ட் ஆலயத்தின் சாமா ரதி அரங்கில் கொண்டாடப்பட்டது. காலையில் முருகனுக்குச் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் செய்யப்பட்டன. பிறகு உற்சவமூர்த்தி விழா மேடைக்கு பவனி வந்தமர்ந்தார். விழாவை சிகாகோ பல்கலைக் கழக அறுவைசிகிச்சைப் பேராசிரியர் டாக்டர் ஜீவானந்தம் வள்ளுவன் தொடங்கி வைத்தார்.

பாட்டு பேச்சு நடனம் என்று பல்சுவை நிகழ்ச்சிகளில் சுமார் 203 குழந்தைகள் பங்கேற்றனர். கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் எழுதி, இயக்கிய 'ஞானப்பழம்' என்ற சிறு நாடகமும், பூமா சுந்தரின் 'சுட்ட பழமா, சுடாத பழமா' நடிப்பும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன.

சிகாகோவிலிருந்து மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் நடனக் கலைஞர்கள் பங்கேற்க வந்திருந்தனர். டெட்ராய்ட்டிலிருந்து வந்திருந்த திருமதி வெங்கடலக்ஷ்மி அவர்களின் நடனக் குழுவில் காவடி ஆட்டம் குறத்தி ஆட்டம் ஆகியவற்றை ஆடிய 8 வயது ஸ்ம்ருதி பாலாவைப் பாராட்டாதவர் இல்லை. திருமதி ஆனந்தி ரத்தினவேலு 'கந்தரனுபூதி' என்ற தலைப்பிலும் கவிமாமணி இலந்தை இராமசாமி 'முருகனும் தமிழும்' என்ற தலைப்பிலும் சிறப்பாக உரையாற்றினர்.
'லிட்டில் முருகா' நிகழ்ச்சியில் ஏராளமான லிட்டில் முருகர்கள் மேடைமேல் தோன்றி மனதைக் கவர்ந்தனர். இதுவே நிகழ்ச்சியின் சிகரம் என்று கூறலாம். திரு கோபால கிருஷ்ணன் அவர்களும், விழாக் குழுவினரும் விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். பாரதி கூறிய 'தெய்வநாளாக இந்நாள் அமைந்திருந்தது.

கவிமாமணி இலந்தை இராமசாமி
More

அட்லாண்டா தமிழ் சபை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
டல்லாஸ் மெரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி
கேல்வஸ்டனில் சூறாவளி நிவாரணம்
காலேஜ்வில் குமோன் பரிசளிப்பு விழா
மிசௌரி தமிழ்ச் சங்கம் முத்தமிழ் விழா
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
ஈஷா யோகா பவுண்டேஷனின் மஹிமா சென்டர்
Share: 




© Copyright 2020 Tamilonline