Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
கான்கார்ட் சிவ முருகன் கோவில் நிதி: ஸ்ருதிஸ்வரலயா அளித்த நாட்டிய நாடகம்
பாரதி தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா
நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
அரிசோனா தமிழ்ப் பள்ளி முதலாண்டு நிறைவு விழா
அட்லாண்டா பெருநகர் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கம் பொங்கல், பாரதி விழா
சிகாகோ தமிழ் சங்கம் பொங்கல் விழா 2008
மனீஷா ராய் பரத நாட்டிய அரங்கேற்றம்
- இந்திரா பார்த்தசாரதி|மார்ச் 2008|
Share:
Click Here Enlargeஜனவரி 27, 2008 அன்று மனீஷா ராயின் பரதநாட்டிய அரங்கேற்றம் சாண்டகிளாரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. புஷ்பாஞ்சலிக்குப் பின் வந்த 'பிருந்தாவன நிலவே' நம்மை கோகுலத்துக்கே அழைத்துச் சென்று அந்த ராஸக்ரீடையை நேரில் பார்த்த வைத்தது.

மிகவும் கடினமான சிம்மேந்திரமத்யம ராக வர்ணத்தில் குரு வித்யா சுப்ரமணியத்தின் ஜதிக்குத் தாளக்கட்டுடனும், பாவத்துடனும் லாகவமாக ஆடினார் மனீஷா. இடை வேளைக்குப் பின் மணி மணியான பதங்கள். பகவானின் நாமஸ்மரணத்தக்கு என்ன பலன் என்பதை, கஜேந்திரனின் பிரார்த்த னைக்கும் பிரகலாதனின் நம்பிக்கைக்கும் ஸ்ரீமன் நாராயணன் அருளியதை, புரந்தர தாசரின் 'தினயாகோ' பதத்துக்கு தத்ரூப மாகச் சித்திரித்தார்.

'ஆடவல்லான்' பதத்தின்மூலம் நடராஜனின் பொன்னம்பலம், வெள்ளியம்பலம், தாமிர சபை, ரத்தினசபை, சித்திரசபை ஆகிய ஐந்து சபைகளின் தோற்றத்தைச் சித்திரித் தது வியக்க வைத்தது. துளசிதாசரின் கிருதியில் கோசலையையும், ராமனையும் கண்முன் கொண்டுவந்தார்.
முத்தாய்ப்பாக, தில்லானாவில் 'காக்கை சிறகினிலே' என்கிற பாரதியாரின் கற்பனைக்கு விமரிசையாக ஆடிப் பரவசப் படுத்தினார்.

குரு வித்யா சுப்ரமணியம், மனிஷாவின் நாட்டியம் மூலமாக குரு சிஷ்ய உறவுக்கும் கற்பிக்கும் திறமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். நேர்த்தியாகப் பாடிய ஆஷா ரமேஷ், சாந்தி (வயலின்), நாராயணன் (மிருதங்கம்) ஆகியோர் பாராட்டுக் குரியவர்கள்.

இந்திரா பார்த்தசாரதி
More

கான்கார்ட் சிவ முருகன் கோவில் நிதி: ஸ்ருதிஸ்வரலயா அளித்த நாட்டிய நாடகம்
பாரதி தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா
நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
அரிசோனா தமிழ்ப் பள்ளி முதலாண்டு நிறைவு விழா
அட்லாண்டா பெருநகர் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கம் பொங்கல், பாரதி விழா
சிகாகோ தமிழ் சங்கம் பொங்கல் விழா 2008
Share: 




© Copyright 2020 Tamilonline