Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | ஜோக்ஸ் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனைப் பாதையில் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
செல்வி லாவண்யா சிவகுமார் பரதநாட்டிய அரங்கேற்றம்
வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் சுதந்திர தின ஊர்தி
நடன அரங்கேற்றம்: காம்யா சங்கர், கீர்த்தனா சங்கர்
அட்லாண்டாவில் முத்தமிழ் விழா
பூஜா ஸஹானி நாட்டிய அரங்கேற்றம்
ஸ்ரீக்ருபா டான்ஸ் குழுமம் பிரியங்கா ரவிச்சந்திரன் நாட்டிய அரங்கேற்றம்
இந்திய ராகங்களில் 'பருவங்களின் ராகங்கள்'
கனடா நிகழ்வுகள் - பாபநாசம் சிவன் இசைவிழா
'கலாலயா' வழங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியம்-ஜேசுதாஸ் இசை நிகழ்ச்சி
- ச. திருமலைராஜன்|செப்டம்பர் 2007|
Share:
Click Here Enlargeசான்·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக பாரம்பரிய இந்தியக் கலைகளைப் பரப்பி வரும் கலாலயா நிறுவனம் ஜூலை 9, 2007 அன்று கே.ஜே. யேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்ரமணியன், சித்ரா ஆகியோர் இணைந்து வழங்கிய அரிய இன்னிசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. சபோ கல்லூரியின் பிரம்மாண்ட அரங்கம் அன்று நிரம்பி வழிந்தது. சென்னையில் இருந்து வந்திருந்த ஷ்யாம் இசைக்குழுவினர் அருமையான பின்னணி இசை வழங்கினர்.

நிகழ்ச்சியைத் தன் கணீரென்ற குரலில் 'மஹா கணபதிம்' என்று கணபதி வணக்கத்துடன் ஜேசுதாஸ் ஆரம்பிக்க ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். தொடர்ந்து 'அம்மா என்று அழைக்காத' என்ற அற்புதமான பாடலை ஜேசுதாஸ் பாடினார். ஜேசுதாசின் மூன்று பாடல்களுக்குப் பிறகு எஸ்.பி.பி. தன் மயக்கும் குரலில் 'சங்கீத ஜாதி முல்லை' என்று தொடங்க கரகோஷம் வானைப் பிளந்தது. ஜேசுதாஸ் யாரும் எதிர்பாராத ஆனால் காலத்தால் அழியாத பல பாடல்களைப் பாடி ரசிகர்களைப் பரவசத்தில் திக்குமுக்காட வைத்தார். 'கல்யாணத் தேனிலா காய்ச்சாத பால்நிலா' போன்ற பாடல்கள் மிகுந்த இன்பமூட்டின. சித்ராவும், சுசித்ராவும் தனியாகவும், எஸ்.பி.பி., ஜேசுதாசுடன் இணைந்தும் பல பாடல்களைப் பாடினார்கள்.

ஜேசுதாஸ் மலையாளத்தில் இருந்து மிகப் பிரபலமான ஹிஸ் ஹைனஸ் படத்தில் இருந்து 'பிரபதவனம் வேண்டும்', செம்மீன் படத்திலிருந்து 'கடலினக்கர போணோரே' போன்ற பாடல்களையும், எஸ்.பி.பி. சங்கராபரணத்தின் 'சங்கரா' பாடலையும் பாடும் பொழுது சபையில் ரசிகர்களின் ஆரவாரம் அடங்க வெகு நேரமானது. நிகழ்ச்சியைத் தொகுத்தளிப்பவர் வராமற் போகவே எஸ்.பி.பி.யும் ஜேசுதாசுமே அந்தப் பணியை ஏற்று, தமது சுவாரசியமான, நகைச்சுவை நிரம்பிய சிந்தனையைத் தூண்டும் உரைகளினாலும் ரசிகர்களைக் கட்டிப் போட்டனர். ஐயப்பனிடமும், குருவாயூரப்பனிடமும் ஜேசுதாசுக்கு இருக்கும் பக்தியை எஸ்.பி.பி. மிக நெகிழ்ச்சியுடன் விவரித்தார். ஜேசுதாசும் இந்திய தேசியத்தின் பண்பாடு, கலாச்சாரம், ஒருமைப்பாடு குறித்து பல சம்பவங்களைச் சொல்லி இசை எவ்வாறு இந்தியர் அனைவரையும் இணைக்கிறது என்பதை அழுத்தமாகப் பல சம்பவங்களின் மூலம் சொல்லி வந்தார்.
சித்ரா அவர்களும் 'மரி மரி நின்னே' போன்ற பல பிரபலமான பாடல்களைப் பாடி ரசிகர்களைப் பரவசத்துக்குள்ளாக்கினார்.

இறுதியாக ஜேசுதாசும், எஸ்.பி.பி.யும் இணைந்து பாடிய 'தளபதி' படப் பாடலைப் பாடி மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கினார்கள். மொத்தத்தில் ஒரு மறக்க முடியாத இசை மாலையை கலாலயாவின் கலா ஐயர் ஒழுங்கு செய்திருந்தார் என்றால் அது மிகையல்ல.

ச. திருமலைராஜன்
More

செல்வி லாவண்யா சிவகுமார் பரதநாட்டிய அரங்கேற்றம்
வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் சுதந்திர தின ஊர்தி
நடன அரங்கேற்றம்: காம்யா சங்கர், கீர்த்தனா சங்கர்
அட்லாண்டாவில் முத்தமிழ் விழா
பூஜா ஸஹானி நாட்டிய அரங்கேற்றம்
ஸ்ரீக்ருபா டான்ஸ் குழுமம் பிரியங்கா ரவிச்சந்திரன் நாட்டிய அரங்கேற்றம்
இந்திய ராகங்களில் 'பருவங்களின் ராகங்கள்'
கனடா நிகழ்வுகள் - பாபநாசம் சிவன் இசைவிழா
Share: 




© Copyright 2020 Tamilonline