Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புதிரா? புரியுமா? | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
தமிழக அரசியல்
சென்னை வழக்கறிஞர்கள் Vs மதுரை வழக்கறிஞர்கள்
திண்டாடும் மாணவர்கள்!
சென்னைக்குக் கடல்நீர்
- கேடிஸ்ரீ|ஆகஸ்டு 2004|
Share:
சென்னை மக்களுக்கு இன்றைய தலையாய பிரச்சனை தண்ணீர். தொடர்ந்து பருவமழை பொய்த்துப் போனதும், பிரதான ஏரிகளான செம்பரம்பாக்கம், புழலேரி, போரூர் போன்ற ஏரிகள் வறண்டு நிலத்தடி நீர் பெரும் அளவு குறைந்து போனது.

கல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் மூலமே இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண முடியும் என்ற கருத்து வலுப்படவே தமிழக அரசும் இதை ஆராயத் தொடங்கியது.

கடல்நீரைக் குடிநீராக்கும் தொழிற்சாலை சென்னையில் நிறுவப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்த போது தெரிவித்தார். ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 30 கோடி லிட்டர் அளவுக்குச் சுத்தமான நீர் கிடைக்கும். சென்னை தவிர, பல கடற்கரையோர நகரங்களிலும் இதே போன்ற தொழிற்சாலைகளை வருங்காலத்தில் நிறுவுவதற்கும் திட்டம் உள்ளது என்றும் நிதியமைச்சர் கூறினார்.
இதுமட்டுமல்லாமல் நீர் ஆதாரங்கள் அனைத்தையும் பழுது பார்த்து, மேம்படுத்தி, சுத்தமான நீரைச் சேமித்து வைக்கும் வகையில் தயார்படுத்தப் பன்னாட்டு நிதிநிறுவனங்கள் மற்றும் நபார்டு உதவியுடன் ஒரு லட்சம் நீர்ப்பாசன ஆதாரங்கள் பழுது பார்க்கப்பட உள்ளன என்றும் அதற்காக 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இத்தகைய குடிநீர் திட்டங்களை ராஜீவ் காந்தி குடிநீர்த் திட்டத்தின் கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் சிதம்பரம்.

கடல்நீராவது வாய்க்கு எட்டுகிறதா என்று பொறுத்துத்தான் பார்கக வேண்டும்.

தொகுப்பு :கேடிஸ்ரீ
More

சென்னை வழக்கறிஞர்கள் Vs மதுரை வழக்கறிஞர்கள்
திண்டாடும் மாணவர்கள்!
Share: 




© Copyright 2020 Tamilonline