Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | Events Calendar | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | அமெரிக்க அனுபவம் | சிறுகதை | கலி காலம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சிரிக்க சிரிக்க | நேர்காணல்
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
கேரட் சாதம்
கொத்தமல்லி படோலி
பட்டாணி சாதம்
காஷ்மீர் புலாவ்
முள்ளங்கி காரபுட்டு
- வசந்தா வீரராகவன்|ஜூன் 2001|
Share:
தேவையான பொருட்கள்:

வெள்ளை அல்லது சிவப்பு முள்ளங்கி - 250 கிராம்
கடலைப்பருப்பு - 200கிராம்
மிளகாய் வற்றல் - 12
இஞ்சி - 1 சிறு துண்டு
வெங்காயம் - 3
பூண்டு - 8 பல்
எண்ணெய் - 1/2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
கொத்தமல்லித் தழை நறுக்கியது - 1 மேஜைக்கரண்டி

பச்சடி செய்யத் தேவையான பொருட்கள்:

தக்காளி - 2
வெங்காயம் - 2
கேரட் - 1
உப்பு - 1/2 சிட்டிகை
செய்முறை

கடலைப்பருப்பை சுத்தம் செய்து அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். முள்ளங்கியை தோல்சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லி, கறிவேப்பிலையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

ஊறவைத்த கடலைப்பருப்பு, முள்ளங்கி, மிளகாய் வற்றல், உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடைக்கு மாவு அரைக்கும் பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.

இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

நன்கு வதக்கிய பின் அத்துடன் உப்பு மற்றும் அரைத்த கடலைப்பருப்பு விழுதையும் சேர்த்துக் கிளறவும். தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விடவும். நன்றாக வெந்தவுடன் உதிரி உதிரியாக வந்த பின் கொத்தமல்லித் தழைத் தூவிப் பரிமாறவும்.

அடுப்பிலிருந்து இறக்கும் போது கெட்டியாக இருந்தாலும் ஆறியவுடன் உதிர்ந்து புட்டு பதத்திற்கு வந்து விடும்.

தேவையெனில் எலுமிச்சைச் சாறு பிழிந்து பரிமாறலாம். முள்ளங்கி காரப்புட்டுடன் இந்தப் பச்சடியைச் சேர்த்துப் பரிமாறலாம்.

பச்சடி செய்முறை:

இரண்டு வெங்காயம், இரண்டு தக்காளி, ஒரு கேரட்டை பொடியாக நறுக்கி கெட்டியானத் தயிரில் சிறிதளவு உப்புச் சேர்த்துக் கலக்கி முள்ளங்கி காரப்புட்டுடன் பரிமாறலாம்.

வசந்தா வீரராகவன்
More

கேரட் சாதம்
கொத்தமல்லி படோலி
பட்டாணி சாதம்
காஷ்மீர் புலாவ்
Share: 




© Copyright 2020 Tamilonline