Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | நூல் அறிமுகம் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
வெய்யில் காலத்துக்கு வற்றல் வடாம்
குழம்பு வடாம்
அரிசி வடாம்
கூழ் வடாம்
ஜவ்வரிசி வடாம்
- இந்திரா காசிநாதன்|ஜூலை 2006|
Share:
தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி - 3 கப்
பச்சை மிளகாய் - 15 (சுமாரான உரைப்புள்ளது)
உப்பு (சுமாராக) - கால் கரண்டி
எலுமிச்சைப்பழம் - 1
பிளாஸ்டிக் பேப்பர் - பெரிய சைஸ் 1
செய்முறை

ஜவ்வரிசியை 4 முதல் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.

பச்சை மிளகாய், உப்பு இவற்றை தண்ணீர் விட்டு மிக்சியில் அரைக்கவும்.

ஊறிய ஜவ்வரிசிக்கு மேல் 4 அங்குலம் முதல் 6 அங்குலம் உயரம் தண்ணீர்விட்டு அடிகனமான பாத்திரத்தில் வைத்து நிதானமாக அடுப்பை எரியவிட்டு வேகவைக்கவும்.

அடிபிடித்துக்கொள்ளாமல் கிளறிக்கொண்டே வரவும்.

கொஞ்சம் கிளறமறந்தால்கூட அடிப்பிடித்துவிடக்கூடும். ஆகையால் நிதானமாக மேலும் கீழும் கிளறிவிடவும். சுமார் 10, 15 நிமிடத்திற்குள் வெந்துவிடும்.

நன்றாக வெந்தவுடன் அடுப்பிலிருந்து கீழே இறக்கி, தட்டு கொண்டு மூடவும்.

சுமார் 1 மணி நேரம் கழித்து எலுமிச்சம் பழசாறு, மற்றும் ஏற்கெனவே தயாராக அரைத்து வைத்திருக்கும் விழுது ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறவும்.

வெயில் வரும் இடத்தில் பிளாஸ்டிக் பேப்பரை போட்டு சிறிய கரண்டி அல்லது ஸ்பூனால் வட்டவட்டமாக வைக்கவும்.

இரண்டு நாட்கள் வெயிலில் உலர்த்தவும். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒவ்வொன்றையும் திருப்பிபோட்டு காய விடவும்.

நன்கு காய்ந்தவுடன் ஈரம் இல்லாத உலர்ந்த டப்பாக்களில் இறுக போட்டுமூடி வைக்கவும்.

தேவையானபோது பொரித்து சாப்பிடலாம்.

குறிப்புகள்:

ஜவ்வரிசியை ஊற வைத்து ஊறியபிறகு அது நன்றாக மலர்ந்து ஊற்றிய தண்ணீருக்கு மேலாக கிளம்பி வந்தால் தண்ணீர் அதிகம் விட்டு கிளறலாம். வாடமும் நிறைய கிடைக்கும்.

ஜவ்வரிசி ஊறிய பிறகு போட்டபடியே இருந்தால் தண்ணீர் அதிகம் தாங்காது. கிளறும் போது கெட்டியாக கிளற வேண்டும். இல்லாவிட்டால் நீற்று போய் வடாம் பேப்பரை விட்டு எடுக்கவராது.

இந்திரா காசிநாதன்
More

வெய்யில் காலத்துக்கு வற்றல் வடாம்
குழம்பு வடாம்
அரிசி வடாம்
கூழ் வடாம்
Share: 




© Copyright 2020 Tamilonline