Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
பொது
மஹாத்மா மஹாத்மா தான்
ஏண்டா வருது தீபாவளி
புகையும் ஆறாவது விரல்
கீதா பென்னட் பக்கம்
இவரைத் தெரிந்துகொள்ளுங்கள் : 'Mostly Tamil' சுதா
அமெரிக்காவில் ஒய்.ஜி. மகேந்திரன்
மக்கள் நல மையம்: ஒரு வேண்டுகோள்
தமிழில் எழுதுவது வேடிக்கையும் கூட!
- |அக்டோபர் 2003|
Share:
"எனக்குச் சொந்தமானது தமிழ் மொழி. அவ்வப்போது ஏதோ பேசி வந்தேன். இப்போது இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நான் மீண்டும் அதை நன்கு அறிந்துகொண்டேன். பேச மட்டுமா? எழுதவும் ஆரம்பித்து விட்டேன். என்னை ஊக்குவித்த முரசு அஞ்சலுக்கு நன்றி"

பல ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த தமிழ் பேசும் தொழிலர் ஒருவர் முரசு அஞ்சலுக்கு எழுதிய கடிதம் இது.

இணையத்திலிருந்து முரசு அஞ்சலை இலவசமாக இறக்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று 1994ல் அறிவித்தோம். அதைப் பார்த்து முரசு அஞ்சலைப் பயன்படுத்திவிட்டு நூற்றுக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்து எங்களுக்கு இப்படி பதில் போட்டார்கள்.

முரசு அஞ்சல் செயலியை நாங்கள் உருவாக்கியதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். நீங்கள் தமிழில் எழுதுவது மிக மிக எளிதாக இருக்க வேண்டும் என்பதுதான். ஒரு கணிணி செயலி என்ன செய்கிறது? அதைப் பயன்படுத்துவோரின் பொறுப்புகளைக் குறைக்கிறது. எந்த கவலையும் இல்லாமல் செய்யும் வேலையில் அவரை ஈடுபடச் செய்கிறது. அதைத் திறன்படச் செய்து முடிக்க உதவுகிறது. இதேபோல்தான் முரசு அஞ்சலும். நீங்கள் எழுதும்போது ஏற்படும் தவறுகளைத் திருத்தியும் மாற்றியும் அமைத்து உதவுகிறது. இதனால் தமிழில் பேச மட்டுமே தெரிந்த ஒருவர் அதிகத் தவறுகள் இல்லாமல் தமிழில் எழுதவும் தெரிந்துகொள்கிறார்.

முரசு அஞ்சல் உங்கள் வீடுகளில் தமிழ் புழக்கத்தை வாசிப்பை எப்படி மேம்படுத்துகிறது தெரியுமா? உங்கள் பிள்ளைகள் அனைவருமே மிகச் சிறிய வயது தொடங்கி கணிணியை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். தமிழை அவர்கள் முதல் மொழியாகப் படிப்பதில்லை. இருந்தும் பெற்றோர்களாகிய நீங்கள் பிள்ளைகள் வீட்டில் தமிழ் பேசுவதை ஊக்குவித்து வருகிறீர்கள். ஆனால் அவர்கள் தமிழில் எழுதிப் பழக நேரமும் வாய்ப்புகளும் குறைவாக உள்ளன. முரசு அஞ்சல் அவர்கள் தமிழில் எழுதிப் பயிற்சி செய்ய உங்கள் இல்லத்தில், கணிணியில் ஒரு நல்ல தோழனாக விளங்குகிறது. ஒரு முழுமையான கருவியாகச் செயல்படுகிறது.

எப்படித் தமிழைப் பேசுகிறார்களோ அப்படியே முரசு அஞ்சல் மூலம் எழுதுகிறார்கள். ஆங்கில எழுத்துக்களைத் தட்டினால் தமிழ் எழுத்துக்கள் வந்து கணிணித் திரையில் விழுகின்றன. கொஞ்ச காலத்திலேயே தமிழ் எழுத்துக்களைத் தெரிந்து கொள்ளவும் நன்கு வாசிக்கவும் முடிகிறது. தமிழ் புத்தகங்களையும் பிறர் எழுதுவதையும் அவர்களால் படிக்க முடிகிறது.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் உங்களுக்குத் தெரியுமா? உங்கள் பிள்ளைகள் தமிழில் எழுதும்போது சில சமயங்களில் பொருத்தமான தமிழ்ச் சொற்கள் தெரியாமல் போகலாம். அல்லது ஒரு ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ் சொல்லைத் தேடலாம்.
முரசு அஞ்சல் 9.7 செயலியில் இப்போது 'நிகண்டு' (thesarus போன்றது) என்னும் புதிய கருவி ஒன்று இருக்கிறது. இரு வகைகளில் அது உங்களுக்கு உதவுகிறது. ஒரு ஆங்கிலச் சொல்லை கணினியில் அடித்தால் போதும். அதற்கு நிகரான தமிழ் சொற்களை நிகண்டு உங்களுக்குத் தரும். தமிழில் ஒரு சொல்லை எழுதுகிறீர்கள். அது சரியான பொருளைத் தருகிறதா? அந்த இடத்திற்கு ஏற்ற சரியான சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறீர்களா? சந்தேகம் வேண்டாம். 'நிகண்டு'வைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் அதற்கு நிகரான சொற்களைப் பார்த்து சரி செய்து கொள்ளலாம்.

நமக்கு "ன" மற்றும் "ண" போன்றவை ஒரேமாதிரி ஒலிக்கும். ஆனால் எழுதும்போது வித்தியாசமாக எழுதப்படும் சொற்களின் எழுத்துக்களைச் சரிபார்க்கவும் நிகண்டு உதவுகிறது. (உதாரணமாக, "மனம்"-"மணம்") அவற்றின் சரியான பொருளை அறிந்து கொள்ளவும் நிகண்டுவைப் பயன்படுத்தலாம்.

தமிழ் பேசத் தெரிந்த உங்களுக்கு எந்த கடினப் பயிற்சியும் தேவை இல்லை. முரசு அஞ்சலைப் பயன்படுத்தத் தெரிந்தால் போதும். தமிழில் எழுதத் தொடங்கி விடலாம். உங்கள் பிள்ளைகள் பேசுவதுடன் எழுதுவதையும் நீங்களே ஊக்குவிக்கலாம். பெற்றோர்களையும் தமிழ் ஆர்வலர்களையும் முரசு அஞ்சல் நல்ல தமிழ் ஆசான்களாக மாற்றுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உலகெங்கும் முரசு அஞ்சல் மூலம் தமிழை எழுதப் பழகி வருகிறார்கள். இல்லை! தங்கள் தாய்மொழியின் பெருமையைத் தெரிந்து கொண்டு தமிழருடனும் தமிழ் கூறும் நல்லுலகத்துடனும் தொடர்பு கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு http://www.murasu.com
More

மஹாத்மா மஹாத்மா தான்
ஏண்டா வருது தீபாவளி
புகையும் ஆறாவது விரல்
கீதா பென்னட் பக்கம்
இவரைத் தெரிந்துகொள்ளுங்கள் : 'Mostly Tamil' சுதா
அமெரிக்காவில் ஒய்.ஜி. மகேந்திரன்
மக்கள் நல மையம்: ஒரு வேண்டுகோள்
Share: 




© Copyright 2020 Tamilonline