Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சிரிக்க சிரிக்க | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
பல்லவி ஸ்ரீராம் பரதநாட்டிய அரங்கேற்றம்
தீஷிதர் ஆராதனை
முத்துநகரில் முதல் தீபாவளித் திருநாள்
நந்தலாலா மிஷனின் நாட்டிய நிகழ்ச்சி
கர்நாடக இசைப் பயிலரங்கம்
சென்னையில் கிளாசிக் குரூப்பின் குடியிருப்புத் திட்டங்கள்
எஸ்.வி. சேகரின் ஹாஸ்ய விருந்து
சிகாகோவில் நாட்டியத் தாரகை ஷோபனா
லிவர்மோர் கோவிலில் கந்த சஷ்டி விழா
சிகாகோ 'நிருத்யாஞ்சலி'யின் ஆண்டுவிழா
- ஜோலியட் ரகு|டிசம்பர் 2003|
Share:
Click Here Enlargeசிகாகோ நிருத்யாஞ்சலியின் இரண்டாவது ஆண்டு விழா லெமான்ட் கோவிலில் நவம்பர் 9ம் தேதியன்று கோலாகலமாக நடைபெற்றது. குரு சுஷ்மிதா அருண்குமார் அவர்களின் இயக்கத்தில் நடத்தப்பட்ட சுமார் 80 குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி இதன் முக்கிய அம்சமாகும்.

நிருத்யாஞ்சலி 1996ல் நான்கே குழந்தை களுடன் தொடங்கியது. இன்று ஏராளமான மாணவர் கள் இங்கு ஆர்வத்தோடு நடனம் பயில்வது இதன் வளர்ச்சிக்குச் சான்று.

ஆபோகி ராகசுலோகத் துடன் தொடங்கிய கலை நிகழ்ச்சி, அமிர்தவர்ஷிணியில் அன்னமாச்சாரியாரின் கீர்த்தனை யில் பொலிவடைந்தது. ஆரபியில் 'வந்தனம்', ஆனந்த பைரவியில் 'த்வமேவ சரணம்', ராகமாலிகையில் 'ஹப்தம்', பௌளியில் ' ஸ்ரீமன் நாராயண' என்று வகைவகையான ராகக் கீர்த்தனைகளுக்குக் குழந்தைகள் அமர்க்களமாக ஆடியது கண்ணுக்கும் காதுக்கும் விருந்து.

முத்தாய்ப்பாக அமைந்தது அடுத்துவந்த தசாவதார ராகமாலிகை. இதில் குரு சுஷ்மிதாவும் மாணவர்களுடன் சேர்ந்து ஆடிப் பிரமிக்க வைத்தார். பிரகலாதனாக ஆடிய சிறுமியும், அனிதா பதியும் அழகாக முகபாவத்துடன் ஆடினர். இவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
அடுத்து ஆடிய ஸ்வாதி ரெட்டி இப்பள்ளியின் முதல் 'பட்டதாரி'. நாட்டியம் நன்றாகவே வருகிறது. தமிழ்க் கலைகளான கும்மி மற்றும் கோலாட்டம் இவற்றை எளிமைப்படுத்திச் சிறப்பாகச் செய்தார்கள். பிருந்தாவன சாரங்காவில் தில்லானாவும், குறிஞ்சியில் மங்களமும் தேன் விருந்து.

அத்தனைக் குழந்தைகளையும் நேர்த்தியாக ஆட்டுவித்த சுஷ்மிதாவைப் பாராட்டியே தீரவேண்டும். இவரது குரு நடன பிதாமகர் பத்மஸ்ரீ அடையாறு லக்ஷ்மணன் பார்த்திருந்தால் மிகவும் பெருமிதப்பட்டிருப்பார்.

ஜோலியட் ரகு
More

பல்லவி ஸ்ரீராம் பரதநாட்டிய அரங்கேற்றம்
தீஷிதர் ஆராதனை
முத்துநகரில் முதல் தீபாவளித் திருநாள்
நந்தலாலா மிஷனின் நாட்டிய நிகழ்ச்சி
கர்நாடக இசைப் பயிலரங்கம்
சென்னையில் கிளாசிக் குரூப்பின் குடியிருப்புத் திட்டங்கள்
எஸ்.வி. சேகரின் ஹாஸ்ய விருந்து
சிகாகோவில் நாட்டியத் தாரகை ஷோபனா
லிவர்மோர் கோவிலில் கந்த சஷ்டி விழா
Share: 




© Copyright 2020 Tamilonline