Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | புதிரா? புரியுமா? | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சிகாகோவில் கே.ஜே. யேசுதாஸ்
காளிமுத்து அவர்களுடன் சந்திப்பு
அவந்தியின் நாட்டிய அரங்கேற்றம்
SIFA வழங்கிய இலையுதிர்கால இசைத்தொடர்
- பத்மப்ரியன்|அக்டோபர் 2004|
Share:
Click Here Enlargeஆகஸ்ட் 22, 2004 அன்று சான் ஹோசேவில் நடந்த மஹாராஜபுரம் ராமச்சந்திரன் அவர்களின் கச்சேரி 'தென்னிந்தியக் கவின்கலைகள்' (South India Fine Arts) அமைப்பு வழங்கும் இலையுதிர்கால இசைத் தொடரின் துவக்க நிகழ்வாக அமைந்தது.

கர்நாடக சங்கீதம் இந்த நூற்றாண்டிலும் தொடர்வதற்கான காரணங்களுள் ஒன்று நம்முடைய குரு-சிஷ்ய பாடமுறை. பதிவு செய்யும் வசதிகள் இல்லாத அந்நாட்களில் இந்த முறையில்தான் இசை வளர்ந்தது. இன்றும் இந்தப் பாரம்பரியத்தைக் காக்கும் குடும்பங்களில் ஒன்று மஹாராஜபுரம் குடும்பம். திருவையாறு தியாகப்பிரும்மத்தின் சிஷ்யப் பரம்பரையில் வந்த மஹாராஜபுரம் ராமச்சந்திரன் இவ்வழியில் வந்தவர்.

துவக்கத்தில் பாடிய 'விநாயகா விநாயகா' என்ற கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் ஸ்துதி கனராகங்களைத் தன்னுள் அடக்கி, அனைத்தும் அந்த கணபதிக்குள் அடக்கம் என்று உணர்த்தியது. தொடர்ந்து வந்த நாட்டைக்குறிஞ்சி, சங்கராபரணம் ராகங் களில் அமைந்த கீர்த்தனைகள் சம்பிர தாயமாக அமைந்திருந்தன. கச்சேரியின் சிறப்பு கல்யாணவசந்தம் ராகத்தில் அமைந்திருந்த பல்லவி. இதில் கல்யாணியையும் வசந்தாவையும் நடுவில் இணைத்த விதம் அவரது புலமையை வெளிப்படுத்தியது.
வாசந்தி, தன்யாசி, மோகன கல்யாணி என இனிய ராகங்களைச் சிறு பாடல்களில் உபயோகித்து ரசிகர்களை மகிழ்வித்த அவர் இறுதியில் 'சம்போ ஸ்வயம்போ' பாடலில் பக்திப் பரவசமூட்டினார். தனியில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார் மிருதங்கம் வாசித்த மன்னார்குடி ஈஸ்வரன். வயலின் வாசிப்பில் கச்சேரிக்கு மெரு கூட்டியவர் டெல்லி சுந்தரராஜன். தொடர்ந்து நடக்கப்போகும் இசை நிகழ்ச்சிகளுக்கு SIFA ரசிகர்களை வரவேற்கிறது.

பத்மப்பிரியன்
More

சிகாகோவில் கே.ஜே. யேசுதாஸ்
காளிமுத்து அவர்களுடன் சந்திப்பு
அவந்தியின் நாட்டிய அரங்கேற்றம்
Share: 




© Copyright 2020 Tamilonline