Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
மாயா ராமச்சந்திரன் நடன அரங்கேற்றம்
சிகாகோவில் மெல்லிசை மழை
தென் கலி·போர்னியாவில் இன்னிசைத் தமிழ் மாலை
சுவாமி சுகபோதானந்தாவின் கீதை காட்டும் வழி
வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் சுதந்திரதினக் கொண்டாட்டம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழங்கிய இன்னிசை மாலைகள்
அம்லு நடேசன் பரத நாட்டிய அரங்கேற்றம்
- உதயா பாஸ்கர் நாச்சிமுத்து|செப்டம்பர் 2005|
Share:
Click Here Enlargeஆகஸ்டு 20, 2005 அன்று நிருத்தி யோல்லாஸ டான்ஸ் அகாதமி மாணவி அம்லு நடேசனின் பரத நாட்டிய அரங்கேற்றம் கேம்ப்பெல் ஹெரிட்டேஜ் கலையரங்கில் இனிதே நடந்தேறியது.

மாலை 4:00 மணிக்குத் துவங்கி, சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பத்துப் பாடல்கள் இடம் பெற்றன. ஒவ்வொரு பாடலின் தொடக்கத்திலும் செல்வி அம்லு அந்தப் பாடலின் கருத்தையும், சிறப்பையும் சிறந்த அபிநயத்துடன் எடுத்துரைத்த பின்னர் நடனமாடினார். இந்நிகழ்ச்சியில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் முருகன், சிவன், விஷ்ணு, துர்கை முதலான தெய்வங்களைப் பற்றிய பாடல்கள். முருகனைப் பற்றிய பாடலில் முருகன் வயோதிகராக வந்து வள்ளியிடம் தண்ணீர் கேட்டு, பின்னர் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கோரும் லீலையையும், பழத்திற்காக உலகையே சுற்றி வந்து தனக்குப் பழம் கிடைக்காமல் கோபம் கொள்ளும் லீலையையும் செல்வி அம்லு சிறந்த அபிநயத்துடன் ஆடி, பார்ப்போர் மனதைக் கொள்ளை கொண்டார்.
ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியிலிருந்து 'வாரணமாயிரம்' பாடலுக்கு அம்லுவின் நடனம் மேலும் அழகு சேர்த்தது. முத்துத்தாண்டவரின் தில்லை நடராஜர் பற்றிய 'ஆடிக்கொண்டார்' பாடலுக்கு அக்னி போன்ற பின்னணித் திரை ஒளி அமைப்பு பாடலுக்கும் நடனத்திற்கும் மெருகூட்டியது. துர்கையைப் பற்றிய பாடலும், இறுதிப் பாடல்களில் ஒன்றான தில்லானாவும் மிகச் சிறப்பாக இருந்தன. அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்துப் பாடலுடன் மங்களமாக நிகழ்ச்சி நிறைவேறியது.

இந்நிகழ்ச்சிக்கு இந்துமதி கணேஷ் (நடன இயக்கம்), ஆஷா ரமேஷ் (வாய்ப்பாட்டு), சாந்தி நாராயணன் (வயலின்), நாராயணன் (வயலின் இசை) ஆகியோர் திறம்படத் துணை போயினர்.

உதயா பாஸ்கர் நாச்சிமுத்து
More

மாயா ராமச்சந்திரன் நடன அரங்கேற்றம்
சிகாகோவில் மெல்லிசை மழை
தென் கலி·போர்னியாவில் இன்னிசைத் தமிழ் மாலை
சுவாமி சுகபோதானந்தாவின் கீதை காட்டும் வழி
வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் சுதந்திரதினக் கொண்டாட்டம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழங்கிய இன்னிசை மாலைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline