Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சிரிக்க சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
தனிக் குடித்தனம்
எல்லாம் நல்லபடிதான் போறது....
அம்மான்ன இதுக்குத்தான்!
மாமியாருக்குக் கடிதம்
ராசி
- நாச்சா|ஜனவரி 2011||(1 Comment)
Share:
"நாளைக்கு கல்யாணமாகிப் போய்ட்ட பிறகு எங்களயெல்லாம் மறந்துராத சரண்யா" உறவினர்கள் கலாய்த்தனர். சரண்யாவைப் பெண் பார்க்க மாலை மாப்பிள்ளை வீட்டார் வருகின்றனர். சமையல் வேலை தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. சரண்யாவுக்கு உள்ளூரச் சந்தோஷம்தான். வெளியில் காண்பிக்க வில்லை.

"பூ, பழம், தாம்பூலம் எல்லாம் சரியா எடுத்து வச்சாச்சா? எல்லாரும் சீக்கிரம் கிளம்புங்க" மாப்பிள்ளை வீட்டார் வேனில் ஏறி அமர்ந்தனர். கிஷோரும் நேரில் பெண்ணைப் பார்க்க ஆவலாக இருந்தான்.

வேன் கிளம்பிப் போய்க் கொண்டி ருந்தது. எதிரில் ஒரு லாரி மிகவும் வேகமாக வந்தது. வேனில் மோதியது. வேன் டிரைவர் சுதாரித்துக் கொண்டதால் வேன் முன்புறத்தில் சிறிய அடியோடு தப்பித்தது.

"நல்லவேளை யாருக்கும் ஒண்ணும் ஆகல்லை. இந்தப் பொண்ணு ராசி இல்லாதவ. இதுவே ஒரு சகுனத் தடையா இருக்கு. இந்த சம்பந்தம் வேண்டாம்னு சொல்லிடுங்க" என்றாள் கிஷோரின் அம்மா. மற்றவர்களும் கோரஸில் சேர்ந்து கொண்டனர்.

கிஷோருக்குக் கோபம் வந்தது. "ஏம்மா இன்னும் பழைய பஞ்சாங்க மாகவே இருக்கீங்க? இன்னும் அந்தப் பெண்ணை பாக்கவே இல்லை. அதுக் குள்ள அவளை ராசி இல்லாதவங்கறீங்க. லாரி வந்த வேகத்துக்கு நேரா மோதி யிருந்தா நாம யாருமே உயிர் பிழைச் சிருக்க மாட்டோம். பெரிய விபத்துல இருந்து தப்பிச்சிருக்கோம். அதுக்குக் காரணம் அந்த பொண்ணோட ராசின்னு சொல்லக் கூடாதா?"
வேறு வண்டியில் மாப்பிள்ளை வீட்டார் போனார்கள். அப்புறம் என்ன, கிஷோர், சரண்யா இருவருக்குமே கல்யாண ராசிதான்!

நாச்சா,
மேரிலாந்து
More

தனிக் குடித்தனம்
எல்லாம் நல்லபடிதான் போறது....
அம்மான்ன இதுக்குத்தான்!
மாமியாருக்குக் கடிதம்
Share: 




© Copyright 2020 Tamilonline