Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
டாலஸ்: உடல்நலக் கருத்தரங்கம்
அனைத்துலக யோகாநாள்: ஐ.நா. தலைமையகத்தில் சத்குரு
ரங்கீலா: சென்னை வெள்ளநிவாரண நடன நிகழ்ச்சி
அரங்கேற்றம்: வித்யா ரவிகுமார்
அரங்கேற்றம்: சுவாதி பாலா
பாரதி தமிழ் கல்வி: முதலாண்டு நிறைவுவிழா
தென்விரிகுடா தமிழ் கல்வி பள்ளி: ஆண்டு விழா
அரங்கேற்றம்: நித்யா கணேஷ்
மராத்தி மண்டல்: நிதி திரட்டும் நிகழ்ச்சி
ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலய மஹாருத்ர விழா
ந்ருத்யகல்யா: 'பக்தபாலா'
CMAY: நெய்வேலி சந்தானகோபாலன் கச்சேரி
அரங்கேற்றம்: பிரணவ் நம்பூதிரி
- சுருதி சொக்கலிங்கம்|ஜூலை 2016|
Share:
ஜூன் 11, 2016 அன்று அமடோர் உயர்நிலைப்பள்ளி அரங்கில் செல்வன் பிரணவ் நம்பூதிரியின் கருநாடக வாய்ப்பாட்டு அரங்கேற்றம் நடைபெற்றது. இவர் ஸ்ரீலலித கான வித்யாலயாவின் குரு திருமதி லதா ஸ்ரீராம் அவர்களிடம் பதின்மூன்று ஆண்டுகளாகக் கர்நாடக இசை பயின்றுவருகிறார்.

பிரணவ் "ஏறா நாபை" என்ற தோடிராக வர்ணத்துடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார். "வல்லப நாயகஸ்ய" (பேகடா) மற்றும் "ராகரத்ன மாலிகசே" (ரீதிகௌளை) என்ற கீர்த்தனைகளில் கம்பீரமான குரல் வளத்துடனும் தெளிவான கமகங்களுடனும் பாடியவிதம் அருமை. "அம்பா காமாக்ஷி" (பைரவி) என்ற ஸ்வரஜதி நிறைவாக இருந்தது. பின்னர், தியாகராஜரின் "எந்துகு பேதல" என்ற சங்கராபரண ராகப் பாடலுக்கு ஆலாபனை, நிரவல், மற்றும் கல்பனா ஸ்வரத்தை பிரணவ் பாடியது மனதைக் கொள்ளைகொண்டது. தொடர்ந்து, "ராஜச சுகுமார்" என்ற அபங் உருக்கமாக இருந்தது. எஸ். கல்யாணராமன் இயற்றிய தில்லானாவை (தர்பாரி கானடா) விறுவிறுப்பாகப் பாடினார். திருப்புகழுடனும் மங்களத்துடனும் நிகழ்ச்சி சிறப்பாக முடிவடைந்தது. திரு. ரவீந்திரபாரதி ஸ்ரீதரனின் மிருதங்கமும் திரு. விக்ரம் ரகுகுமாரின் வயலின் இசையும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டின.

நிகழ்ச்சியின் நிறைவில் லதா அவர்கள் மனோதர்மத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசி, வித்யாலயா சார்பாகப் பிரணவுக்குப் பதக்கம் அளித்தார். இந்த இசைப்பள்ளி இருபத்தைந்தாம் ஆண்டை நோக்கி வெற்றிநடை போடுகின்றது.
சுருதி சொக்கலிங்கம்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா
More

டாலஸ்: உடல்நலக் கருத்தரங்கம்
அனைத்துலக யோகாநாள்: ஐ.நா. தலைமையகத்தில் சத்குரு
ரங்கீலா: சென்னை வெள்ளநிவாரண நடன நிகழ்ச்சி
அரங்கேற்றம்: வித்யா ரவிகுமார்
அரங்கேற்றம்: சுவாதி பாலா
பாரதி தமிழ் கல்வி: முதலாண்டு நிறைவுவிழா
தென்விரிகுடா தமிழ் கல்வி பள்ளி: ஆண்டு விழா
அரங்கேற்றம்: நித்யா கணேஷ்
மராத்தி மண்டல்: நிதி திரட்டும் நிகழ்ச்சி
ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலய மஹாருத்ர விழா
ந்ருத்யகல்யா: 'பக்தபாலா'
CMAY: நெய்வேலி சந்தானகோபாலன் கச்சேரி
Share: 




© Copyright 2020 Tamilonline