| சிந்தி கடி 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| தேவையான பொருட்கள் வெந்தயக்கீரை (மேத்தி) - 1 கட்டு
 வெங்காயம் - 1
 பச்சைமிளகாய் - 3
 இஞ்சி - 1 துண்டு
 கடலைமாவு - 2 கிண்ணம்
 கொத்துமல்லி - சிறிதளவு
 உப்பு - தேவைக்கேற்ப
 எண்ணெய் - பொரிக்க
 
 கடி தயாரிக்க
 கெட்டித்தயிர் - 2 கிண்ணம்
 கடலைமாவு - 3 மேசைக்கரண்டி
 பச்சைமிளகாய் (தாளிக்க) - 3
 இஞ்சி - 1 துண்டு
 சீரகம் - 1 தேக்கரண்டி
 ஓமம் - 1 தேக்கரண்டி
 வெந்தயம் - 1 தேக்கரண்டி
 மிளகாய்வற்றல் - 2
 பெருங்காயம் - சிறிதளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு
 உப்பு - தேவைக்கேற்ப
 மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
 நெய் (அ) எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை பச்சைமிளகாய், இஞ்சி இவற்றை மிக்சியில் விழுதாக அரைத்து, தயிரை 2 கிண்ணம் தண்ணீர் விட்டுக் கடைந்து மோராக்கி, உப்பு, மஞ்சள்பொடி போடவும். வாணலியில் நெய்விட்டு சீரகம், மிளகாய்வற்றல், வெந்தயம், பெருங்காயம் சிவக்க வறுத்துத் தாளித்து மோரில் போட்டு, கறிவேப்பிலை, மிளகாய் இஞ்சி விழுதையும் போட்டுக்கொள்ளவும். கடலைமாவில் உப்பு, மேத்தி (பொடியாக நறுக்கியது), நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சித்துண்டுகள், கொத்துமல்லி எல்லாம் போட்டுப் பிசையவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் இதைச் சிறிய பக்கோடாக்களாக உருட்டிப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
 
 மோரை அடுப்பில் வைத்து, கொதிக்கும்போது இறக்கி, அதில் பக்கோடாக்களைப் போட்டு உண்ணலாம். முன்னரே பக்கோடாவைக் குழம்பில் போடாமல் தனியாய் வைத்துக்கொண்டு, அவ்வப்போது போட்டுச் சாப்பிட்டால் மொறுமொறுப்பாக இருக்கும். இது மிகவும் சுவையானதாகும்.
 
 தங்கம் ராமசாமி,
 பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சிந்தி கடி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |