அன்புள்ள சிநேகிதியே
நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம். எது செய்தாலும் உங்கள் அத்தைக்கு (நீங்கள் விவரித்த விதத்திலிருந்து புரிந்துகொள்கிறேன்) உங்கள் கணவர் கூறியதுபோல, பொறாமை ஒரு காரணமாக இருக்கலாம். இதை நான் நிறையப் பேரிடம் பார்த்திருக்கிறேன். நம்மைவிடக் குறைந்த நிலையில் பார்த்தவர்களை, பல வருடங்கள் கழித்து நம்மைவிட எங்கோகோகோ..... போய்விட்டவர்களைப் பார்த்தால், வாழ்க்கையில் முதிர்ச்சி அடைந்தவர்களுக்கு வியப்பும் சந்தோஷமும் இருக்கும். இல்லாதவர்களுக்கு நிலைகளைச் சரிபார்த்து ஒப்பீடு செய்துகொண்டே, அந்தப் பொறாமை ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் வெளிப்படும். Jealousy is a form of compliment to you என்று எடுத்துக்கொள்ளுங்கள். பொறாமை ஒரு வக்கிர உணர்ச்சி. Waste of time. Drains your energy. Pollutes the mind. இயற்கையின் விதி எல்லாருக்கும் ஒரு 'ராஜபாட்டை'யை அமைத்துக் கொடுப்பதில்லை. இது உங்கள் அத்தையின் சுபாவம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். பிறர் நம்மீது பொறாமைப்படுவதும் நமக்கு ஒரு பாடமாகத்தான் இருக்கும். நம்மைவிட நல்ல நிலையில் இருப்பவர்களைப் பார்த்து நாம் வியப்பும் சந்தோஷமும் படக் கற்றுக்கொள்வோம். Jealousy will not pollute our minds. நீங்கள் நீங்களாக இருங்கள்.
வாழ்த்துக்கள், டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன், கனெக்டிகட் |