ஜூலை 2026: வாசகர் கடிதம்
Jul 2026
ஜூன் தென்றல் இதழில் சிறப்புப் பார்வை பகுதியில் பத்மஸ்ரீ அங்கே கௌடா அவர்களின் 'அங்கே கௌடா புஸ்தக மனே' பற்றிய விவரங்கள் படித்து மகிழ்ந்தேன். சிறுவயது முதலே புத்தகங்கள் படித்ததுடன், கிடைத்த குறைந்த வருவாயில், புத்தகங்கள் வாங்கிச் சேமித்து, தன் வீட்டையே நூலகமாக மாற்றியுள்ளது அறிந்து வியந்தேன்.
மனோகர் எழுதியுள்ள 'கனவும் நிஜமும்' அருமையான சிந்தனை கொண்ட கதை. 'அமானுஷ்யம்' முடிவு ஒரு விதத்தில் நமக்குத் தெரிந்தாலும், வெங்கடேஷ் அற்புதமாக எழுதியுள்ளார்.
அலமாரிப் பகுதியில் கானசரஸ்வதி டி.கே. பட் மேலும்...
|
|