| தேவையான பொருட்கள் பீர்க்கங்காய்		-	1பிஞ்சாக
 வெங்காயம்		-	1
 பச்சை மிளகாய்	-	2-4
 தக்காளி		-	2 பெரியது
 கொத்தமல்லி	-	1 பிடி
 இஞ்சி		-	1 துண்டு
 சீரகம்		-	2 ஸ்பூன்
 மஞ்சள் பொடி	-	0.5 ஸ்பூன்
 முந்திரி		-	6 பருப்பு
 எண்ணெய்		-	1 கரண்டி
 தக்காளி ஸாஸ்	-	1 கரண்டி
 உப்பு		-	தேவையான அளவு
 
 செய்முறை
 
 பீர்க்கங்காயை பொடியாக நறுக்கவும். பிஞ்சாக இல்லாமல் சற்று முற்றியதாய் இருந்தால் தோல் சீவிவிட்டு நறுக்கவும்.
 
 இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
 
 1தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கவும். தக்காளியை மிக்ஸியில் அரைக்கவும்.
 
 வாணலியில் எண்ணை விட்டு சீரகம் தாளித்த இஞ்சி, பச்சை மிளகாய் வெங்காயம், தக்காளியை வதக்கவும். பீர்க்கங்காயை சேர்க்கவும். அதுவும் வதங்கியதும் அதனுடன் அரைத்த தக்காளி, மஞ்சள் பொடி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
 
 கெட்டியாக வரும்போது தக்காளி ஸாஸ் விடவும். வாணலியில் நெய்விட்டு முந்திரியை வறுக்கவும்.
 
 கூட்டை இறக்கி வைத்து கொத்தமல்லி, வறுத்த முந்திரியை போட்டு அலங்கரிக்கவும்.
 
 சப்பாத்திக்கு புலவ் போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ளலாம். குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த மான கூட்டு இது.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 |