| தேவையான பொருட்கள் 
 கத்தரிக்காய் துபாசுமதி அரிசி கொண்டு சமைத்த சாதம் 	- 	2 கிண்ணம் (உதிர் உதிராக)
 வறுத்த வேர்க்கடலை				-	1/4 கிண்ணம்
 நெய்					-	1 டேபிள் ஸ்பூன்
 கடலைப் பருப்பு				-	2 டேபிள் ஸ்பூன்
 தனியா (கொத்தமல்லி)				-	1 டீஸ்பூன்
 புதியதாக துறுவிய தேங்காய் துறுவல்			-	1/8 கிண்ணம்
 காய்ந்த சிவப்பு மிளகாய்				-	5
 இலவங்க பட்டை				-	1/2" துண்டம்
 மிளகு					-	5
 ஏலக்காய்					-	1
 கிராம்பு					-	1
 சோம்பு					-	1 டீஸ்பூன்
 மாங்காய் பொடி				-	1/4 டீஸ்பூன்  (இந்தியன் கடைகளில் கிடைக்கும்)
 கறிவேப்பிலை				-	கொஞ்சம்
 
 செய்முறை
 
 அடி கனமான ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடலைப் பருப்பு, தனியா, காய்ந்த சிவப்பு மிளகாய், சீரகம், இலவங்க பட்டை, மிளகு, ஏலக்காய், கிராம்பு, சோம்பு(பெருஞ்சீரகம்), தேங்காய் துருவல் போட்டு வறுத்து ஆறிய பின்பு, மிக்ஸியில் தண்ணீர் விடாமல் பொடி செய்து கொள்ளவும்.
 
 அடி கனமான ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு போட்டு பொன்னிறமானதும், கத்தரிக்காய் துண்டங்களைப்  போட்டு வேகவிடவும். உப்பு, மஞ்சள்பொடி சேர்க்கவும். காய் குழைந்து விடக்கூடாது. தயார் செய்து வைத்துள்ள மசாலா பவுடரை சேர்த்து கலக்கவும்.
 
 அடுப்பிலிருந்து இறக்கி ஆம்சூர் பவுடரைப் போட்டு கலக்கவும். உதிர் உதிராக உள்ள சூடான சாதத்தில் இந்த கத்தரிக்காய் கலவையைப் போட்டு, தேவையான உப்பு, வறுத்த வேர்க்கடலை போட்டு நன்றாக கலக்கவும். கறிவேப்பிலை தாளித்துக்கொட்டி கலக்கவும்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 |