கி.ரா. விருது
கி.ராஜநாராயணனின் நினைவைப் போற்றும் வகையில், கோவை விஜயா பதிப்பகத்தின் 'விஜயா வாசகர் வட்டம்' சார்பில், ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளுக்கு 'கி.ரா.' விருது வழங்கப்படுகிறது. 2023-ம் ஆண்டுக்கான விருதுக்கு எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார். எழுத்தாளர்கள் கண்மணி குணசேகரன், கோணங்கி, அ. முத்துலிங்கம் ஆகியோர் இதற்குமுன் இவ்விருது பெற்றனர்.

கோவையில் செப்டம்பர் 17ம் தேதி நடைபெறும் விழாவில், ஓய்வு பெற்ற தலைமைச் செயலர் வெ. இறையன்பு இவ்விருதினை வழங்குகிறார். ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் வழங்கும் ரூ.5 லட்சம் ரொக்கம், கேடயம் ஆகியவை கொண்டது இவ்விருது.

எஸ்.வி. ராஜதுரைக்கு வாழ்த்துக்கள்!

© TamilOnline.com