Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்
முன்னோட்டம் | எனக்குப் பிடிச்சது | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
 View Comments
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: எரிந்த மாளிகை-Sep 2015
3 Comments
By: Hari Krishnan (India) Sep 09, 2015 - My other reviews << Return to Article
திரு ஸபாஸா: உங்கள் கருத்துக்கு நன்றி. அந்த விடைக்காக நான் ஒதுக்கியது இரண்டு பத்திகள் மட்டுமே. ஒரு வாசகர் ஒரு கேள்வியை முன்வைக்கிறார் என்றால், அந்தக் கேள்வி பல வாசகர்கள் மனங்களில் இருக்கிறது என்று பொருள். அவர்கள் கேட்கவில்லை. நீங்கள் கேட்டிருக்கறீர்கள். அதுதான் வேறுபாடு. ஆகவே, நான் எல்லா வாசகர்களுக்கும் சேர்த்தே விளக்கியிருக்கிறேன். அவர்கள் சார்பாக கேட்ட உங்களுக்கு அவர்களும் மானசீகமாக நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொன்று. நான் மகாபாரதத்தின் சிக்கல் நிறைந்த கேள்விகள், முடிச்சுகள் போன்றவற்றை மட்டுமே கையாண்டு கொண்டிருக்கிறேன். கதை சொல்லவில்லை. ஆகவேதான் இந்தத் தொடருக்குப் பயணக் குறிப்புகள் என்று பெயர். தெரிந்த சம்பவங்களும், அவை பற்றி பரவலான கருத்துகளுக்கு உரிய தெளிவையும் சுட்டுவதே இத் தொடரின் நோக்கமாகையால், இதற்கு அணுக்கமாக இருந்த உங்கள் கருத்துக்கும் விடையளித்தேன். It is a representative question of many other silent readers என்பது இதன் அடிப்படை. ஆகவே வருந்த வேண்டாம். நீங்கள் உதவிதான் செய்திருக்கறீர்கள். மீண்டும் நன்றி.

By: SaaPaaSaa (India) Sep 07, 2015 - My other reviews << Return to Article
அன்புள்ள ஹரிக்ருஷ்ணன் அவர்களுக்கு, உங்கள் விளக்கமான பதிலுக்கு மிக்க நன்றி. எனக்காக ஒரு முழு இதழ் ஒதுக்கியது வருத்தமாக இருக்கிறது. நீங்கள் எழுதுவதே மாதம் ஒருமுறை. கதையின் தேக்கத்திற்கு நான் காரணமாக விரும்பவில்லை. மற்ற வாசகர்கள் என்னை, பார்லிமெண்டை முடக்கிய எதிர்க்கட்சியைப் போல் காண்பார்கள். தயை கூர்ந்து கமெண்ட்ஸ் பகுதியிலேயே பதில் தரவும். இப்படிக்கு, ஸா பா ஸா .

By: Chinnaswamy (India) Sep 06, 2015 - My other reviews << Return to Article
அன்புள்ள ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம். இந்த மாதம் முழுவதுமே "ஒரு வருட காலதாமதத்திற்கான காரணமாகவே" எழுதிவிட்டீர்கள். பீமனே தீ வைத்தான் என்கிறபோது அவனது சகோதரர்கள் சுயப்ரக்ஞையுடன் தானே இருந்திருக்கிறார்கள்; பீமனுடன் அவர்களும் நடந்தே அரக்கு மாளிகையை விட்டு சென்றிருக்கலாமே! பலசாலியான பீமன் அவர்கள் அனைவரையும், தாயார் குந்தி உள்பட, தூக்கிக் கொண்டு நடந்தான் /வெளியேறினான் என்றல்லவா படித்திருக்கிறேன். இப்படிக்கு உங்கள் எழுத்தில் ஆழ்ந்துள்ள VCS 07:05 06/09/2015





© Copyright 2020 Tamilonline