Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
AIM For Seva: மீராவின் ஆன்மீகப் பயணம்
கன்கார்டு: சிவமுருகன் கோவில் பூமிபூஜை
அட்லாண்டா: ஸ்வேதா ரவிசங்கரின் 'நாட்டியமும் நற்றமிழும்'
அரங்கேற்றம்: ஆகாஷ் மணி ராமன்.
TNF ஒஹையோ: நெடுநடை
அபிநயா: பரதநாட்டிய அரங்கேற்றங்கள்
அரங்கேற்றம்: அன்னபூர்ணா ராம்மோகன்
அரங்கேற்றம்: கௌரி நாராயண்
அரங்கேற்றம்: ஐஸ்வர்யா ஸ்ரீ மோகன்
இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் பாரதி தமிழ்ச் சங்கம்
FeTNA: தமிழ் தொழில்முனைவோர் மாநாடு
அரங்கேற்றம்: திவ்யா உமாபதி
டென்னசி: குறள்தேனீ போட்டி
மூத்தோர் இசை நிகழ்ச்சி
- இந்திரா பார்த்தசாரதி|செப்டம்பர் 2016|
Share:
ஜூலை 24, 2016 அன்று ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் பங்கேற்ற இசைநிகழ்ச்சி ஒன்று அன்பர் இல்லத்தில் நடைபெற்றது. பாடியவர்களில் இருவர் ஐ.ஐ.டியில் படித்தவர்கள். இருவர் மருத்துவர்கள். ஒருவர் ஐ.ஐ.டி.யில் படித்தவரின் மனைவி. ஒருவர் கணிதப் பேராசிரியர். இவர்களை ஒருங்கிணைத்த குரு திருமதி. கல்யாணி சதானந்தத்தின் மகன் புகைப்படக்காரராகவும் இயங்கினார். இவர், ஐ.ஐ.டி. முடித்துவிட்டு நியூரோசர்ஜன் ஆகப் பணிபுரிகிறார். இந்நிகழ்ச்சியில் பாடியவர்கள் ராதா ரமேஷ், கீதா ஸ்வாமிநாதன் (எம்.பி.ஏ., சி.ஏ.), ஜயந்தி, சுகுமார் (ஐ.ஐ.டி), அனு, ஜயராம், சரஸா நாராயணசுவாமி, ராஜி அனந்தா, டாக்டர் கிருத்திகா ஸ்ரீதர், டாக்டர் கலா கிருஷ்ணா (கணிதப் பேராசிரியர்), கீதா கண்ணன் ஆகியோர்.

முதலாவதாக 'சாயீஸம் விநாயகா' என்கிற ஹம்ஸத்வனி ராகக் கீர்த்தனையை குரு. கல்யாணி சதானந்தமே பாடி ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்த 'கஜவதனா' என்கிற ஸ்ரீரஞ்சனி க்ருதியைத் தொடர்ந்தது 'வேங்கட்ரமணா' என்கிற கல்யாணி ராகத்தில் பாபநாசம் சிவனின் பாடல். பின்னர் 'ஸ்ரீவிஸ்வநாதம்' என்கிற 14 ராகங்களைக் கொண்ட தீக்ஷிதர் பாடலை அபாரமாக நிறுத்தி அனுபவித்துப் பாடினர். கல்லிடைக்குறிச்சி சுந்தரமய்யரின் 'மாமதுர மீனாட்சி' என்கிற பாகேஸ்ரீ ராகப்பாடல் பாடப்பெற்றது. ஜயதேவரின் அஷ்டபதியான நாதஹரேயை ராகமாலிகையாகப் பாடினர். அடுத்து 'இஷ்வாகுகுல வம்ஸ' என்ற க்ருதியைப் பாடினர். 'பவநாத்மஜா' என்கிற தீக்ஷிதரின் சலநாட்டை கீர்த்தனையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. பக்கவாத்தியங்கள் எதுவுமில்லாமல் ஆத்மார்த்தமாக அனுபவித்துப் பாடினர். கேட்கவும் ஆனந்தமாக இருந்தது.
இந்திரா பார்த்தசாரதி,
கலிஃபோர்னியா
More

AIM For Seva: மீராவின் ஆன்மீகப் பயணம்
கன்கார்டு: சிவமுருகன் கோவில் பூமிபூஜை
அட்லாண்டா: ஸ்வேதா ரவிசங்கரின் 'நாட்டியமும் நற்றமிழும்'
அரங்கேற்றம்: ஆகாஷ் மணி ராமன்.
TNF ஒஹையோ: நெடுநடை
அபிநயா: பரதநாட்டிய அரங்கேற்றங்கள்
அரங்கேற்றம்: அன்னபூர்ணா ராம்மோகன்
அரங்கேற்றம்: கௌரி நாராயண்
அரங்கேற்றம்: ஐஸ்வர்யா ஸ்ரீ மோகன்
இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் பாரதி தமிழ்ச் சங்கம்
FeTNA: தமிழ் தொழில்முனைவோர் மாநாடு
அரங்கேற்றம்: திவ்யா உமாபதி
டென்னசி: குறள்தேனீ போட்டி
Share: 




© Copyright 2020 Tamilonline